வீட்டுத்தோட்டம் பற்றியும் அது அளிக்கும் இன்பத்தைப் பற்றியும் போன பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். வீட்டுத்தோட்டம் மனதுக்கு மகிழ்ச்சி உடலுக்கு ஆரோக்கியம் , இதய நோயைப் போக்கும், தோட்டத்தைப் பார்க்கும் போது உற்சாகம் தொற்றிக் கொள்கிறது என்று பின்னூட்டம் கொடுத்தவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து இருக்கிறார்கள். இப்படி வீட்டுத்தோட்டம் , நலங்கள் பல தருகிறது எனத் தெரிகிறது.
ஒரு பழைய சினிமாப் பாடல் -குழந்தைகள் பாடுவது போல் இருக்கும்- சிறு வயதில் மணலில் வீடு கட்டி விளையாடும் போது கூட தோட்டம் அமைக்க வேண்டும் என்று குழந்தைகள் பாடுவார்கள்:
’ஆத்தோரம் மணல் எடுத்து அழகழகாய் வீடு கட்டி,
தோட்டம் இட்டு செடி வளர்த்து ஜோராக குடி இருப்போம்.
’
அந்த வீட்டில் வந்தவர்களுக்கு எல்லாம் இடம் இருக்கும் என்று பாடுவார்கள்
வீட்டுக்கு வரும் எல்லோருக்கும் அந்த வீட்டில் இடம் இருக்குமாம் எவ்வளவு அழகாய் பாட்டு எழுதி இருப்பார்கள்! சீனிவாஸ் அவர்களும், சுசீலா அவர்களும் நன்றாகப் பாடி இருப்பார்கள்.
பாரதியாரும் ”அழகாய் மாளிகை ! அதில் தென்னைமரங்கள் !அதில் அமர்ந்து கீதம் இசைக்கும் குயிலை எல்லாம் ரசிக்க வேண்டும்!” என்கிறார். இப்படி இயற்கை சூழலில் இருந்தால் கவி பாடக் கேட்க வேண்டுமா!
//காணி நிலம் வேண்டும்-பராசக்தி
காணி நிலம் வேண்டும்;-அங்கு,
தூணில் அழகியதாய்-நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய்-அந்தக்
காணி நிலத்திடையே-ஓர் மாளிகை
கட்டித் தரவேணும்;-அங்கு,
கேணி யருகினிலே-தென்னைமரம்
கீற்று மிளநீரும்
பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம்
பக்கத்திலே வேணும்;-நல்ல
முத்துச் சுடர்போலே-நிலாவொளி
முன்புவர வேணும்?அங்கு
கத்துங் குயிலோசை-சற்றே வந்து
காதிற்பட வேணும்;-என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்
தென்றல்வர வேணும்.
பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும்;-எங்கள்
கூட்டுக் களியினிலே-கவிதைகள்
கொண்டுதர வேணும்;-அந்தக்
காட்டு வெளியினிலே,-அம்மா!நின்தன்
காவலுற வேணும்;என்தன்
பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.//
என்று அவர் பாடினார்
என்னுடைய போன பதிவைப்படிக்காதவர்கள் படிக்கலாம். அதன்சுட்டி
சின்னஞ்சிறு தோட்டம் சிங்காரத் தோட்டம்
மண்,மரம், மழைஎன்று வலைத்தளம் வைத்து இருக்கும்
திரு .வின்சென்ட் அவர்கள் ஆகஸ்ட் தேதி 25 உலக வீட்டுத்தோட்டத்தினம் என்று சொல்லி ஒரு சிறு பதிவு போட்டு இருக்கிறார் பாருங்கள்.
//பெருகி வரும் ஜனத்தொகை, குறைந்து வரும் அல்லது அழிவைத்தரும் மழையளவு, விளை நிலங்கள் விலை நிலங்களாக மாறுவது, அதிக இரசாயன பயன்பாடு, மரபணு மாற்ற விதைகள், தரமற்ற நிலத்தடி நீர், துரிதஉணவு முறை இவை அனைத்தும் மக்களின் ஆரோக்கிய வாழ்வையும், புரிந்துணர்வையும் கேள்விக் குறியாக்குவதோடு முறைகேடான விலைவாசி உயர்வையும், ஊழலையும் நாட்டில் ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுப்பதற்கு நம்மாலான ஒரு மிகச் சிறிய வாய்ப்பு இந்த “வீட்டுத் தோட்டம்”
உலக வீட்டுத் தோட்ட தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 4 வது ஞாயிற்றுக் கிழமையன்று கொண்டாடப்படுகிறது. இந்த உலக வீட்டுத் தோட்ட தினத்தில் உங்கள் சிந்தையில் “வீட்டுத் தோட்டம்” என்னும் சிறு விதையை ஊன்றுங்கள் அது முளைத்து வளர்ந்து விருட்சமாகி உங்களுக்கும் இந்த சமுதாயத்திற்கும் பயனளிக்கட்டும்.எனது வீட்டுத் தோட்டம் பற்றிய பழைய பதிவு:
http://maravalam.blogspot.in/2010/10/blog-post_26.html
வீட்டுத் தோட்டம் / மாடித் தோட்டம் இன்றைய காலத்தின் தேவை .//
நான் என் போன பதிவில் என் தோட்டத்திற்கு வந்த விருந்தாளிகளைப்பற்றி அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன் என்றேன் .அவர்களை நீங்களும் பாருங்களேன்.
வித்தியாசமான வண்ணத்துப்பூச்சி
![]()
தூரத்திலிருந்து எடுத்த மைனா
![]()
தேன் எடுக்கும் கரு வண்டு
![]()
தூரத்திலிருந்து எடுத்த மணிப் புறா
![]()
தரையின் வண்ணம் கொஞ்சம் எடுத்துக் கொள்ளலாம் என்று வந்த வண்ணம் குறைந்த வண்னத்துப் பூச்சி
![]()
![]()
சிட்டுக்குருவிகள் ,, தவிட்டுக் குருவி
ஒரு பழைய சினிமாப் பாடல் -குழந்தைகள் பாடுவது போல் இருக்கும்- சிறு வயதில் மணலில் வீடு கட்டி விளையாடும் போது கூட தோட்டம் அமைக்க வேண்டும் என்று குழந்தைகள் பாடுவார்கள்:
’ஆத்தோரம் மணல் எடுத்து அழகழகாய் வீடு கட்டி,
தோட்டம் இட்டு செடி வளர்த்து ஜோராக குடி இருப்போம்.
’
அந்த வீட்டில் வந்தவர்களுக்கு எல்லாம் இடம் இருக்கும் என்று பாடுவார்கள்
வீட்டுக்கு வரும் எல்லோருக்கும் அந்த வீட்டில் இடம் இருக்குமாம் எவ்வளவு அழகாய் பாட்டு எழுதி இருப்பார்கள்! சீனிவாஸ் அவர்களும், சுசீலா அவர்களும் நன்றாகப் பாடி இருப்பார்கள்.
பாரதியாரும் ”அழகாய் மாளிகை ! அதில் தென்னைமரங்கள் !அதில் அமர்ந்து கீதம் இசைக்கும் குயிலை எல்லாம் ரசிக்க வேண்டும்!” என்கிறார். இப்படி இயற்கை சூழலில் இருந்தால் கவி பாடக் கேட்க வேண்டுமா!
//காணி நிலம் வேண்டும்-பராசக்தி
காணி நிலம் வேண்டும்;-அங்கு,
தூணில் அழகியதாய்-நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய்-அந்தக்
காணி நிலத்திடையே-ஓர் மாளிகை
கட்டித் தரவேணும்;-அங்கு,
கேணி யருகினிலே-தென்னைமரம்
கீற்று மிளநீரும்
பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம்
பக்கத்திலே வேணும்;-நல்ல
முத்துச் சுடர்போலே-நிலாவொளி
முன்புவர வேணும்?அங்கு
கத்துங் குயிலோசை-சற்றே வந்து
காதிற்பட வேணும்;-என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்
தென்றல்வர வேணும்.
பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும்;-எங்கள்
கூட்டுக் களியினிலே-கவிதைகள்
கொண்டுதர வேணும்;-அந்தக்
காட்டு வெளியினிலே,-அம்மா!நின்தன்
காவலுற வேணும்;என்தன்
பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.//
என்று அவர் பாடினார்
என்னுடைய போன பதிவைப்படிக்காதவர்கள் படிக்கலாம். அதன்சுட்டி
சின்னஞ்சிறு தோட்டம் சிங்காரத் தோட்டம்
மண்,மரம், மழைஎன்று வலைத்தளம் வைத்து இருக்கும்
திரு .வின்சென்ட் அவர்கள் ஆகஸ்ட் தேதி 25 உலக வீட்டுத்தோட்டத்தினம் என்று சொல்லி ஒரு சிறு பதிவு போட்டு இருக்கிறார் பாருங்கள்.
//பெருகி வரும் ஜனத்தொகை, குறைந்து வரும் அல்லது அழிவைத்தரும் மழையளவு, விளை நிலங்கள் விலை நிலங்களாக மாறுவது, அதிக இரசாயன பயன்பாடு, மரபணு மாற்ற விதைகள், தரமற்ற நிலத்தடி நீர், துரிதஉணவு முறை இவை அனைத்தும் மக்களின் ஆரோக்கிய வாழ்வையும், புரிந்துணர்வையும் கேள்விக் குறியாக்குவதோடு முறைகேடான விலைவாசி உயர்வையும், ஊழலையும் நாட்டில் ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுப்பதற்கு நம்மாலான ஒரு மிகச் சிறிய வாய்ப்பு இந்த “வீட்டுத் தோட்டம்”
உலக வீட்டுத் தோட்ட தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 4 வது ஞாயிற்றுக் கிழமையன்று கொண்டாடப்படுகிறது. இந்த உலக வீட்டுத் தோட்ட தினத்தில் உங்கள் சிந்தையில் “வீட்டுத் தோட்டம்” என்னும் சிறு விதையை ஊன்றுங்கள் அது முளைத்து வளர்ந்து விருட்சமாகி உங்களுக்கும் இந்த சமுதாயத்திற்கும் பயனளிக்கட்டும்.எனது வீட்டுத் தோட்டம் பற்றிய பழைய பதிவு:
http://maravalam.blogspot.in/2010/10/blog-post_26.html
வீட்டுத் தோட்டம் / மாடித் தோட்டம் இன்றைய காலத்தின் தேவை .//
இந்தப் பதிவில் வீட்டுத்தோட்டம் அமைக்க இடம் இல்லை என்றால் மாடித்தோட்டம் அவசியம் என்கிறார்.
நான் என் போன பதிவில் என் தோட்டத்திற்கு வந்த விருந்தாளிகளைப்பற்றி அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன் என்றேன் .அவர்களை நீங்களும் பாருங்களேன்.
வித்தியாசமான வண்ணத்துப்பூச்சி
தூரத்திலிருந்து எடுத்த மைனா
தூரத்திலிருந்து எடுத்த மணிப் புறா
தரையின் வண்ணம் கொஞ்சம் எடுத்துக் கொள்ளலாம் என்று வந்த வண்ணம் குறைந்த வண்னத்துப் பூச்சி
கும்பிடு பூச்சி, இலை பூச்சி, குச்சி பூச்சி இப்படியும் சொல்லாம் தானே!
பூனையார் ஒளிந்து பார்க்கிறார்
பூ அழகா, நான் அழகா ?

சிட்டுக்குருவிகள் ,, தவிட்டுக் குருவி
தானியங்களை கொறிக்க அணில் செய்யும் சாகசங்கள்
என் மகன் , மருமகள் இருவரும் தங்கள் வீட்டுத் தோட்டத்திற்கு வந்த விருந்தாளிகளை தங்கள் காமிராவில் எடுத்து வைத்து இருந்தார்கள் . அந்த அணில், குருவி தொகுப்பை கொடுத்து உதவினார்கள்.
நடனம் ஆடும் வண்ணத்து பூச்சி
இசை நீரூற்று
சமீபத்தில் பென்சில்வேனியாவில் உள்ள ”லாங்வுட் கார்டன்” என்ற தோட்டம் போய் இருந்தோம். அதில் இசை நீர் ஊற்று பார்த்தோம். அது போல் தாத்தாவிடம் வீட்டுத்தோட்டத்தில் நீரூற்று செய்யவேண்டும் என்று பேரன் .
. சொல்ல அதேபோல் நீரூற்று செய்ய , அதற்கு பேரன் பாட்டுப் பாடுகிறான்.
உலக வீட்டுத்தோட்டநாளில் நம்வீட்டுத்தோட்டத்தில்ஒருரோஜாசெடியாவது
வைத்து மகிழ்வோம் .வாழ்க வளமுடன். a