என்னுடைய தங்கை குடும்பத்தினர் டிசம்பர் மாதம் இங்கு வந்திருந்தபோது தரங்கம்பாடி கடற்கரைக்குப் போய் இருந்தோம். அவள் நிறைய கோவில்களுக்கு போகும் திட்டத்தில் வந்து இருந்தாள் .அவளது விருப்பப்படி கோவில்களுக்குப் போய் வந்தோம். தங்கையின் மகள் கடற்கரைக்குப் போகவேண்டும் என்று விருப்பப்பட்டாள். அதனால் தரங்கம்பாடிக்குப் போனோம்
தமிழ்நாட்டில், நாகபட்டினம் மாவட்டத்தில் காரைக்காலிலிருந்து வடக்கே 15 கிலோமீட்டர் தொலைவிலும் மயிலாடுதுறையிலிருந்து 25 கிலோமிட்டர் தொலைவிலும் தரங்கம்பாடி அமைந்துள்ளது.
கடல் அலைகளின் ஓசை பாடுவதைப்போல இனிமையாக இருப்பதால் இந்தப் பெயர் வந்ததாம்
தரங்கம்பாடியில் டேனிஷ் கோட்டை, மியூசியம், மாசிலாமணி கோவில் எல்லாம் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில், நாகபட்டினம் மாவட்டத்தில் காரைக்காலிலிருந்து வடக்கே 15 கிலோமீட்டர் தொலைவிலும் மயிலாடுதுறையிலிருந்து 25 கிலோமிட்டர் தொலைவிலும் தரங்கம்பாடி அமைந்துள்ளது.
கடல் அலைகளின் ஓசை பாடுவதைப்போல இனிமையாக இருப்பதால் இந்தப் பெயர் வந்ததாம்
தரங்கம்பாடியில் டேனிஷ் கோட்டை, மியூசியம், மாசிலாமணி கோவில் எல்லாம் பார்க்கலாம்.
![]() |
தரங்கம்பாடியின் நுழைவாயில்-மெயின்கார்டு கேட் |
தரங்கம்பாடி --டேனிஷ் கோட்டை
-கி.பி 17 ஆம் நூற்றாண்டில் ஒரு முக்கியவணிகத் தலமாக இத்தரங்கம்பாடிக் கிராமம் இருந்தது. இங்கு டேனிஷ்காரர்களின் கோட்டை இருந்துள்ளது. கி.பி 1620-ல் தஞ்சாவூர் மன்னர் ரெகுநாதநாயக்கர் காலத்தில் டென்மார்க் அரசின் கடற்படைத்தளபதியான’ ஓவ்கிட்” என்பவர் இக்கோட்டையைக்கட்டியுள்ளார். 19ஆம் நூற்றாண்டு வரை ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் வணிக மையமாக விளங்கியுள்ளது. 1977 முதல் தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை ,பண்டைய சின்னமாக இக்கோட்டையைப் பாதுகாத்து வருகிறது.
1979 ஆம் ஆண்டு இக் கோட்டையில் இந்தியா. டென்மார்க் நாடுகளுக்கிடையே அரசியல், வணிக, பண்பாடு மற்றும் சமூகத் தொடர்புகளை வெளிப்படுத்தும் வகையில் கருத்துச்செறிவுள்ள டேனிஷ் அகழ்வைப்பகம் அமைக்கப்பட்டது.
நாங்கள் அங்கு போனபோது மழை மேகங்கள் சூழ்ந்து இருந்தது. கோட்டைக்குள் நுழைந்த போது பெரும் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது.
மழைவிட்ட பிறகு முடிந்தவரை படங்கள் எடுத்தோம். 2009 ஆம் வருடம் ஜூனில் கோட்டைக்கு நன்றாக ரெட் ஆக்ஸைடு அடித்து இருந்தார்கள். புதிதாக அழகாய் இருந்தது. இந்தமுறை போனபோது அது மாறி பழைய தோற்றம் தருகிறது.
![]() |
கடலை நோக்கிய பீரங்கி |
2009 -- ல் நாங்கள் போனபோது எடுத்த படம் -டேன்ஸ்போர்க் கோட்டை
சிறைச்சாலை ,பண்டக அறைகள்
இந்தக் கோட்டையில் ஒருபக்கத்தில், கைதிகளைத் தூக்கில் இட்ட இடம் உள்ளது. தூக்கு தண்டனை நிறைவேறியவுடன் அந்த உடல் கடலில் சென்று சேர்வது போல் அடியில் நீர்வழி இருந்ததாக கூறுகிறார்கள். அதில் இப்போது நம் ஆட்கள் குப்பைகளைப் போட்டு வைத்து இருக்கிறார்கள்.
![]() |
கோட்டையின் உட்புறத் தோற்றம் |
சுரங்கப் பாதை
மாசிலாமணி கோவில் பழைமையானது.,அக்கோயில் காலத்தாலும், கடல் சீற்றத்தாலும் சமீப காலத்தில் முற்றிலுமாக அழிந்து விட்டது. அதை இப்போது மீண்டும் புதிதாகக் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். கடல் அரிப்பைத் தடுக்க நிறைய கற்பாறைகளை கொண்டு வந்து போட்டிருக்கிறார்கள். அனுமன் இலங்கை செல்வதற்குப் பாலம் கட்டியது போல் -நீண்ட பாதை போல் -கற்பாதைகள் அமைத்து இருக்கிறார்கள்.
![]() |
மாசிலாமணிநாதர் கோயில்-புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. குடமுழுக்குக்காகக் காத்திருக்கிறது. |
![]() |
எப்போது திறக்கும்? கோவில் கும்பாபிஷேகம் ஆகும் முன்பே துவாரபாலகர் கை உடைக்கப்பட்டு இருக்கிறது. |
![]() |
நடைபாதை |
![]() |
கடற்கரை விடுதி |
முன்பு கோவில் இருந்த இடத்தில் - இடிந்த கோவில் கட்டிடப்பகுதிகள் இருக்கும் இடத்தில் - இயற்கை அற்புதம் செய்துகொண்டு இருக்கிறது. இடிபாடுகளுக்கு இடையில் கடல் அலை மேலே எழுந்து கீழே இறங்கும்போது சொல்லமுடியாத அழகு! பார்க்கப் பார்க்கத் திகட்டாத அழகு! அந்த இடத்தை விட்டு வரவே மனம் வரவில்லை.
கடற்கரைக்கு வரும் மனிதர்களை நம்பி இருக்கும் உயிரினங்கள்
சுடச்சுட கடலை வியாபாரம்
சீகன்பால்கு
என் தங்கை மகளுடன் நாங்களும் கடற்கரையை ரசித்து வந்தோம்.
---------------