Quantcast
Channel: திருமதி பக்கங்கள்
Viewing all articles
Browse latest Browse all 789

தரங்கம்பாடி

$
0
0
என்னுடைய தங்கை குடும்பத்தினர்  டிசம்பர் மாதம் இங்கு வந்திருந்தபோது தரங்கம்பாடி கடற்கரைக்குப்  போய் இருந்தோம். அவள்  நிறைய கோவில்களுக்கு போகும் திட்டத்தில் வந்து இருந்தாள் .அவளது விருப்பப்படி கோவில்களுக்குப் போய் வந்தோம். தங்கையின் மகள் கடற்கரைக்குப் போகவேண்டும் என்று விருப்பப்பட்டாள். அதனால்  தரங்கம்பாடிக்குப் போனோம்

தமிழ்நாட்டில், நாகபட்டினம் மாவட்டத்தில் காரைக்காலிலிருந்து வடக்கே 15 கிலோமீட்டர் தொலைவிலும்  மயிலாடுதுறையிலிருந்து 25 கிலோமிட்டர்  தொலைவிலும்  தரங்கம்பாடி அமைந்துள்ளது.

கடல் அலைகளின் ஓசை பாடுவதைப்போல இனிமையாக இருப்பதால் இந்தப் பெயர் வந்ததாம்

தரங்கம்பாடியில் டேனிஷ் கோட்டை,  மியூசியம், மாசிலாமணி கோவில் எல்லாம் பார்க்கலாம்.
தரங்கம்பாடியின் நுழைவாயில்-மெயின்கார்டு கேட்


தரங்கம்பாடி --டேனிஷ் கோட்டை

-கி.பி 17 ஆம் நூற்றாண்டில் ஒரு முக்கியவணிகத் தலமாக இத்தரங்கம்பாடிக் கிராமம் இருந்தது. இங்கு டேனிஷ்காரர்களின் கோட்டை இருந்துள்ளது. கி.பி 1620-ல் தஞ்சாவூர் மன்னர் ரெகுநாதநாயக்கர் காலத்தில் டென்மார்க் அரசின் கடற்படைத்தளபதியான’ ஓவ்கிட்” என்பவர் இக்கோட்டையைக்கட்டியுள்ளார். 19ஆம் நூற்றாண்டு வரை ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் வணிக மையமாக விளங்கியுள்ளது.  1977 முதல்  தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை ,பண்டைய சின்னமாக இக்கோட்டையைப் பாதுகாத்து வருகிறது.

1979 ஆம் ஆண்டு இக் கோட்டையில் இந்தியா. டென்மார்க் நாடுகளுக்கிடையே அரசியல், வணிக, பண்பாடு மற்றும் சமூகத் தொடர்புகளை வெளிப்படுத்தும் வகையில் கருத்துச்செறிவுள்ள டேனிஷ் அகழ்வைப்பகம் அமைக்கப்பட்டது.

கோட்டையின் ஒரு பகுதி
நாங்கள் அங்கு போனபோது மழை மேகங்கள் சூழ்ந்து இருந்தது. கோட்டைக்குள் நுழைந்த போது பெரும் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. 
மழைவிட்ட பிறகு முடிந்தவரை படங்கள் எடுத்தோம். 2009 ஆம் வருடம் ஜூனில் கோட்டைக்கு நன்றாக ரெட் ஆக்ஸைடு அடித்து இருந்தார்கள்.  புதிதாக அழகாய் இருந்தது. இந்தமுறை போனபோது  அது மாறி  பழைய தோற்றம் தருகிறது.





கடலை நோக்கிய பீரங்கி


2009 --  ல்  நாங்கள் போனபோது எடுத்த  படம் -டேன்ஸ்போர்க் கோட்டை



சிறைச்சாலை ,பண்டக அறைகள்



இந்தக் கோட்டையில் ஒருபக்கத்தில், கைதிகளைத் தூக்கில் இட்ட இடம் உள்ளது. தூக்கு தண்டனை நிறைவேறியவுடன் அந்த உடல் கடலில் சென்று சேர்வது போல் அடியில் நீர்வழி இருந்ததாக கூறுகிறார்கள். அதில் இப்போது நம் ஆட்கள் குப்பைகளைப் போட்டு வைத்து இருக்கிறார்கள்.



கோட்டையின் உட்புறத் தோற்றம்


சுரங்கப் பாதை


குதிரைலாயம்



அகழ்வைப்பகம்





மியூசியத்தில் உள்ள பழைய காசுகள்




மியூஸியத்தில் உள்ள கண்ணாடி ஓவியம்



 மன்னர்  ரெகுநாதநாயக்கர்



கோட்டையை சுற்றி அகழி இருந்தாகவும், கோட்டையில் நுழைய தூக்குப்பாலம் இருந்ததாகவும் கூறுகிறார்கள். அது இப்போதும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்து இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

மாசிலாமணிநாதர் கோயில்

இடிவதற்கு  முன் இருந்த மாசிலாமணிநாதர் கோயிலின் படம்-மியூசியத்தில்


மாசிலாமணி கோவில் பழைமையானது.,அக்கோயில் காலத்தாலும், கடல் சீற்றத்தாலும் சமீப காலத்தில் முற்றிலுமாக அழிந்து விட்டது. அதை இப்போது மீண்டும் புதிதாகக் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.   கடல் அரிப்பைத் தடுக்க நிறைய கற்பாறைகளை கொண்டு வந்து போட்டிருக்கிறார்கள்.  அனுமன் இலங்கை செல்வதற்குப் பாலம் கட்டியது போல் -நீண்ட பாதை போல் -கற்பாதைகள் அமைத்து இருக்கிறார்கள்.


மாசிலாமணிநாதர் கோயில்-புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. குடமுழுக்குக்காகக் காத்திருக்கிறது.

எப்போது திறக்கும்?
கோவில் கும்பாபிஷேகம் ஆகும் முன்பே துவாரபாலகர் கை உடைக்கப்பட்டு இருக்கிறது.


கரைப்பாதுகாப்பு அரண்

கடற்கரை

போனமுறை (2009-இல்),என்னுடைய மகள் வந்து இருந்தபோது, கோட்டையை  விட்டுத்  தள்ளி தூரத்தில் கடல் அலைகள் இருந்ததால் பிள்ளைகளுக்கு மணலில விளையாட நிறைய இடம் இருந்தது. இப்போது கடல், கோட்டையின் அருகில் வந்து விட்டது. அங்கு விளையாட மணல் பரப்பு இல்லை, கோட்டை வாயில் எதிரில் நடைபாதை அமைத்து  இருக்கிறார்கள். அழகிய விளக்குத்தூண்கள் இரண்டு புறமும் இருக்கிறது. மரக்கன்றுகள்  புதிதாக நட்டு இருக்கிறார்கள். அடுத்தமுறை போகும்போது அவை வளர்ந்து நிழல் தரும் என்று நினைக்கிறேன்.



கிளிஞ்சல்களைச்  சேகரிக்கும் பெண்

கடல்,  கிளிஞ்சல்களை (சிப்பிகள்)  அள்ளி வந்து குமிக்கிறது . அங்கு பெண்கள் வலைக்கூடை வைத்துக்கொண்டு அந்த கிளிஞ்சல்களை  அள்ளிக் குமிக்கிறார்கள். அந்தக்  கிளிஞ்சல்கள் சுண்ணம்பு தயார் செய்யப்  பயன்படுகிறது.

சேகரிக்கப்பட்ட கிளிஞ்சல் குவியல்

நடைபாதை


       கடற்கரை விடுதி


முன்பு கோவில் இருந்த இடத்தில் - இடிந்த கோவில் கட்டிடப்பகுதிகள் இருக்கும் இடத்தில் - இயற்கை அற்புதம் செய்துகொண்டு இருக்கிறது. இடிபாடுகளுக்கு இடையில் கடல் அலை மேலே எழுந்து கீழே இறங்கும்போது சொல்லமுடியாத அழகு! பார்க்கப் பார்க்கத் திகட்டாத அழகு!  அந்த இடத்தை விட்டு வரவே மனம் வரவில்லை.


                                                    





கடற்கரைக்கு வரும் மனிதர்களை நம்பி இருக்கும் உயிரினங்கள்


சுடச்சுட கடலை வியாபாரம்


         சீகன்பால்கு
சீகன்பால்கு

இவர் ஜெர்மனி நாட்டில் பிறந்து, டென்மார்க் நாட்டின் திருச்சபை சார்பாக கிறித்துவ சமயப்பிரச்சாரம் செய்ய கி.பி 1706இல் தரங்கம்பாடிக்கு வந்தார். முதன்முதலில் இந்தியாவில் தமிழில் அச்சு இயந்திரம் செய்து அச்சிட்டார்.  அந்த அச்சு இயந்திரம் மியூசியத்தில் உள்ளது. சீகன்பால்கு பைபிளை தமிழில் முதலில் மொழிபெயர்த்தார். தரங்கம்பாடியில் ’ஜெருசலம் சர்ச்’சைக் கட்டினார்.  

காணும்பொங்கல் அன்று இங்கு மக்கள் பெருமளவில் கூடுகிறார்கள். அச்சமயம் இவ்வூரில் ரேக்ளா ரேஸ் நடைபெறும்.நாங்கள் ஒருமுறை கண்டு களித்தோம்.
என் தங்கை மகளுடன் நாங்களும் கடற்கரையை ரசித்து வந்தோம்.
---------------




Viewing all articles
Browse latest Browse all 789

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>