இறைவன் அமைத்த தோட்டத்தில் மலர்களைக் கண்டுகளிக்கக் கண் அளித்த கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டே கண்டு மகிழலாம்.மலர்களிலே பல நிறம் . மலர்கள் பலவகை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் அழகு. இறைவனுக்குப் பாமாலையும், பூமாலையும் கொண்டு அடியவர்கள் வணங்குகிறார்கள்.
நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே! நீ வா
நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு
புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கும் இட்டுப்
பூமாலை புனைந்து ஏத்திப் புகழந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடிச்
சங்கரா சயபோற்றிபோற்றிஎன்றும்
அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதி என்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே!
--- திருநாவுக்கரசர்.
’முத்தான முத்துக்குமாரா’ என்று தொடங்கும் பாடலில்,
” அன்று பூத்த மலரால் உன்னை அர்ச்சிப்பேன் வருவாய் அப்பா, அன்பான மனதால் உன்னை அர்ச்சிப்பேன் வருவாய் அப்பா! ”
என்று இருக்கும். மனம் மலர்ந்து , மலர்ந்த மனதால் அர்ச்சிப்பது மிகவும் சிறப்பு.
ஒவ்வொரு கோவில் திருவிழாவிலும் ஒரு நாள் உற்சவம் பூச்சொரிதல் உண்டு. பலவித மலர்களால் பூச்சொரிதல் செய்து மகிழ்வார்கள்.
புதுச்சேரி அரவிந்தர் ,அன்னை ஆசிரமத்தில் மலர் வழிபாடு மிக முக்கியம்.
ஆசிரமத்தில் அழகான தோட்டம் அமைத்து இருந்தார்கள் அன்னை.
‘மலர்கள் இயற்கை அன்னையின் எழில் மிகு வடிவங்கள்’ என்பது ஸ்ரீ
அன்னையின் கருத்தாகும்.
ஒவ்வொரு பூவையும் பயன்படுத்தும் முறையின் மூலம் பலவித நற்காரிய சித்திகளை பெறும் வழி முறைகளை சித்தர்கள் அருளி உள்ளனர்.
அரவிந்த-அன்னை வழிபாட்டில் மலர் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. நம் கோரிக்கையை அரவிந்த அன்னையிடம் மலர்கள் கொண்டு சேர்க்கின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை
.
பக்தியில் ஆர்வம் பெருக - பவழமல்லி,
தெளிவான மனதிற்கு மனோரஞ்சிதம்,
உடல் நலம் பெற பூவரசம்பூ,
ஆன்மிக சூழல் கிடைக்க வேப்பம்பூ,
தைரியத்திற்கு எருக்கம்பூ,
மனத்தூய்மைக்கு மல்லிகை,
உடல் சக்திக்கு சாமந்தி...
என்று அரவிந்த அன்னைக்கு சமர்ப்பித்துப் பலன் பெறுகிறார்கள்.
மனம் மலர்வது போல் நம் உள்ளமும் மலர வேண்டும்.
பென்சில்வேனியாவில் உள்ள ”லாங்வுட் கார்டன்”மலர்த்தோட்டத்தை
அடுத்த பதிவில் பார்க்கலாம் என்றேன் அல்லவா?
வித்தியாசமான மலர்கள் அடங்கிய தோட்டத்தைப் பார்த்து மகிழலாம் வாருங்கள்.
மலர்களில் ராஜா =ரோஜா
ஊதா இங்க் தெளித்த மாதிரி சிறு மலர்கள்
ஆர்கிட் மலர்கள்
அலமண்டா பூ
வெள்ளை \கேந்தி
சூரிய காந்திப்பூ போல
நடுவில் ஐந்து வெள்ளை சிறு மலர்- வெளியில் நான்கு ஊதா இதழ்
சாமந்திப்பூ (செண்டுப்பூ)
டிசம்பர் போ போல
வெள்ளி மல்லி போல
அந்தி மந்தாரைப்பூப் போல
குட்டிமலர்
காகிதப் பூப் போல
தண்ணீர் இல்லை- தரையில் வளர்ந்த தாமரை
தண்ணீரின் அளவுக்கு ஏற்ப மேலே வரும் என்பதைப் பொய்யாக்கி மண்ணில் வளர்ந்து பெரிதாகி நிற்கிறது.
வெண்தாடித் தாத்தா -பூ
வண்ணத்து பூச்சி பூ
குட்டி அகல் விளக்கு போல
முதலை போல
முதலையின் வால் அல்லது பாம்பு
யானைக் காதுச் செடி
இயற்கை அன்னை தந்த அழகிய பச்சைத் தாம்பாளம்
பச்சைத் தட்டுக்கள்
மிதக்கும் இலைதட்டுக்கள்
அல்லி மலரும் இலைத் தட்டும்
தட்டான் -அழகாய் மொட்டில்
முகம் எல்லாம் தாடி வைத்த வயதானவர் போல் இல்லே!
கள்ளிகள் நடுவில் அலங்கார விளக்கு போல ஒரு கள்ளி
போன்சாய்க் காடு
அழகாய் அடுக்கு தீபாராதனைத் தட்டு போல!
வாங்க வாங்க தாத்தா என்னைப் பிடிங்க
புல்வெளி எங்கும் இந்த சிறு மலர்ப் பந்து குதித்து கும்மாளம் இடுவது போல நமக்கும் குதித்து மகிழ ஆசைதான்.
தேச பிதா பிறந்த தினத்தில் அவரை வணங்குவோம்.
மன மகிழ்ச்சி, மனவருத்தம் இதனால் மதுவை நாடுகிறார்கள் சிலர். உண்மையான மகிழ்ச்சியை அடைய இயற்கையை ரசிக்கலாம், காந்தி தாத்தா போல் கள்ளமில்லாமல் சிரிக்கும் மழலையை கண்டும் மகிழலாம்.
சிரிக்கும் மலர்களைக் கண்டும் மனம் ஆறுதல் அடையலாம்
வாழ்க வளமுடன்!