திருக்கண்ணபுரம்
நித்திய புஷ்கரணி, நிமிர்ந்த கோபுரம்.
கண்ணபுரம் செல்வேன் கவ்லையெல்லம் மறப்பேன்
கண்ணனின் சன்னிதியில் எந்நேரமும் இருப்பேன் - திரு
கண்ணபுரம் செல்வேன் கவ்லையெல்லம் மறப்பேன்
கண்ணனின் சன்னிதியில் எந்நேரமும் இருப்பேன்
வண்ண வடிவழகை கண்குளிரக் காண்பேன்
எண்ணமெல்லம் அவனின் இணையடியே என்பேன்
நித்திய புஷ்கரணி நீரினிலே குளிப்பேன்
நிமிர்ந்த கோபுரத்தை கண்டு கைகள் குவிப்பேன்
உத்பலா பதக விமானத்தையே நினைப்பேன்
உள்ளத்தில் அள்ளி வைத்தே உவகையிலே திளைப்பேன் ( )
கருட மண்டபத்தை கடந்து தொடர்ந்திடுவேன்
கண்ணாடி சேவை கண்டு கண்கள் கசிந்திடுவேன்
பெருமாள் சன்னிதிமுன் பித்தாகி நின்றிடுவேன்
பிறவிப்பிணி அறுத்து உலகை வென்றிடுவேன்
எட்டெழுத்தைக் சொல்லி கிட்டே நெருங்கிடுவேன்
ஒம் நமோ நாராயணா என்ற
எட்டெழுத்தை சொல்லி கிட்டே நெருங்கிடுவேன்
என்னை தெரிகிறதா என்றே கேட்டிடுவேன்
கட்டியணைத்தெனக்கு கைகொடுப்பான் கண்ணன்
கற்பூரம் மணக்கின்ற கால்பிடித்தே உய்வேன் ( )
கண்ணனின் சன்னிதியில் எந்நேரமும் இருப்பேன் - திரு
கண்ணபுரம் செல்வேன் கவ்லையெல்லம் மறப்பேன்
கண்ணனின் சன்னிதியில் எந்நேரமும் இருப்பேன்
வண்ண வடிவழகை கண்குளிரக் காண்பேன்
எண்ணமெல்லம் அவனின் இணையடியே என்பேன்
நித்திய புஷ்கரணி நீரினிலே குளிப்பேன்
நிமிர்ந்த கோபுரத்தை கண்டு கைகள் குவிப்பேன்
உத்பலா பதக விமானத்தையே நினைப்பேன்
உள்ளத்தில் அள்ளி வைத்தே உவகையிலே திளைப்பேன் ( )
கருட மண்டபத்தை கடந்து தொடர்ந்திடுவேன்
கண்ணாடி சேவை கண்டு கண்கள் கசிந்திடுவேன்
பெருமாள் சன்னிதிமுன் பித்தாகி நின்றிடுவேன்
பிறவிப்பிணி அறுத்து உலகை வென்றிடுவேன்
எட்டெழுத்தைக் சொல்லி கிட்டே நெருங்கிடுவேன்
ஒம் நமோ நாராயணா என்ற
எட்டெழுத்தை சொல்லி கிட்டே நெருங்கிடுவேன்
என்னை தெரிகிறதா என்றே கேட்டிடுவேன்
கட்டியணைத்தெனக்கு கைகொடுப்பான் கண்ணன்
கற்பூரம் மணக்கின்ற கால்பிடித்தே உய்வேன் ( )
காற்றினிலே வரும் கீதம் வலைத்தளத்தில் பாடல் எடுத்தேன். கண்னன் பாட்டுக்களை ஒரே இடத்தில் படிக்கலாம்.
முக நூலில் திருக்கண்ணபுரம் படம் போட்ட போது வல்லி அக்கா கண்ணபுரம் சேவித்தேன்
கவலை எல்லாம் மறந்தேன் என்று சொன்ன வுடன். சீர்காழி கோவிந்த ராஜன் அவர்கள் பாடிய பாடல் இங்கு மிகவும் பிடிக்கும் என்றேன். உடனே எனக்கு அந்த பாடலை அனுப்பி கேட்க வைத்து மகிழ்ச்சி படுத்தி விட்டார்கள்.
நான் வரைந்த கண்ணன் (மார்கழி கோலம்)


கோலங்கள் பல செய்யும் கண்ணன்


பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம்
பரவசமிகவாகுதே.. கண்ணா
பரவசமிகவாகுதே.. கண்ணா
எங்கள் வீட்டுக் கண்ணன்

புல்லாங்குழல் கொண்டு வருவான் - அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்:
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்:

செவிமடுத்த பிறவி மனங்களித் திடுமே


போன வருடம் இந்த உறியின் படம் முகநூலில் பகிர்ந்த போது அதற்கு
ஸ்ரீராம் எழுதிய கவிதை.
//கிண்ணங்களில்
வைக்காதீர்கள்!பாலையும், வெண்ணெயையும்..
வைக்காதீர்கள்!பாலையும், வெண்ணெயையும்..
உறி போலச் செய்து
கட்டித் தொங்க விடுங்கள்..
ஓடோடியும் வருவான் கண்ணன்!
கட்டித் தொங்க விடுங்கள்..
ஓடோடியும் வருவான் கண்ணன்!
அவனுக்கும் தெரியும்
திருடுவதில் உள்ள சுகம்
தானாகக் கிடைப்பதில் இல்லை என்று!//
கண்ணனின் குறும்பு .
திருடுவதில் உள்ள சுகம்
தானாகக் கிடைப்பதில் இல்லை என்று!//
கண்ணனின் குறும்பு .
மருமகள் வரைந்த கண்ணாடி ஓவிய தவழும் கண்ணன்
முறுக்கு, இனிப்பு, உப்பு சீடை, தட்டை செய்வதை விட்டு வெகுகாலம் ஆகி விட்டது. அப்பம், அவல் பாயசம், வெண்ணெய், தயிர் வைத்து வணங்கி விடுவேன். இந்த முறை குடியிருப்பு வளாகத்திற்கு ஒரு பெரியவர், முறுக்கு, சீடை, அவல், கடலை எல்லாம் பாக்கெட் போட்டு விற்றார், மழையும் மாலையில் கடைக்குப் போக முடியாமல் பெய்து கொண்டு இருந்தது.
எளிமையாக அவல் பாயசம் மட்டும் வைத்து கொண்டாடும் எண்ணத்தில் இருந்தேன். சார் ஊருக்கு போய் இருந்தார்கள் வரும் போது கண்ணனுக்கு போளி வாங்கி வந்தார்கள் , வாழைக்காய் சிப்ஸ் வாங்கி இருந்தார்கள் , தம்பி வீட்டுக்கு வந்தவன் பழங்கள் வாங்கி வந்தான்.
வீட்டிலிருந்த முந்திரி, திராட்சை, பாதாம், வெண்ணை இவற்றை வைத்து சிறப்பாக்கிக் கொண்டார் கண்ணன்.

மயிற்பீலிக் கண்ணன்
மாணவிகள் கொடியை உடையில் குத்திக் கொண்டு சுதந்திரதினத்தை கொண்டாடி விட்டு திரும்புகிறார்கள். (சிறு வயதில் பள்ளியில் சுதந்திர தினம் கொண்டாடியது நினைவுக்கு வந்தது.)
சிறுபையன் தன் அப்பா பின்னால் தேசியகொடியை எடுத்து செல்கிறான். நான் அலைபேசியை எடுத்து படம் எடுப்பத்தற்குள் வேகம் எடுத்து விட்டது வண்டி.
அனைவருக்கும் சுதந்திரதினவாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
அனைவருக்கும் சுதந்திரதினவாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.