Quantcast
Channel: திருமதி பக்கங்கள்
Viewing all articles
Browse latest Browse all 789

திருக்கேதாரத் தலபயணம் -பகுதி 6

$
0
0



                             பகுதி-6

                        அநேகதங்காவதம்
                       (ANEKATHANGAVATHAM)
14.05.2012 
அதிகாலை 4.50க்கு உத்தரகாசியிலிருந்து  புறப்பட்டோம். தராசு, டெஹ்ரி, ஸ்ரீநகர் என்கிற ஊர்களின் வழியாக ருத்ரப் ப்ரயாகை அடைந்தோம். உலகிலேயே அதிக உயரத்தில் அமைந்த அணைக்கட்டு டெஹ்ரி அணைக்கட்டு என்றார்கள்.



டெஹ்ரி அணைக்கால்வாய்

டெஹ்ரி அணை

டெஹ்ரி நகரமும் மன்னர் கோட்டையும்


நெடுஞ்சாலைச் சுரங்கப்பாதை-ருத்ரப்ரயாகை
ருத்ரப்ரயாகையில் கங்கை நதியின் மூல நதியாகிய அலக்நந்தா ஆறும், மந்தாகினி ஆறும் கூடுகின்றன.
ருத்ரப் ப்ரயாகை

குப்தகாசி
ருத்திரப்ரயாகையிலிருந்து சுமார் 40 கி.மீ தூரத்தில் குப்தகாசி என்னும் நகரம் உள்ளது. நகரத்தில் நடுவில், ஒரு மலை மீது அமைந்திருக்கும் விஸ்வநாதர் திருககோயிலைச் சென்று பார்த்தோம். சுமார் 100 படிகள் ஏறவேண்டும். 

குபதகாசி கோயில் செல்லும் வழி

குப்தகாசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்லும் வழி




மகாபாரதப் போர் முடிவுக்கு வந்ததும், பஞ்சபாண்டவர்கள் உறவினர்களைக் கொன்ற பாவம் நீங்கவும், மோட்சம் அடையவும் சிவபெருமானைக் காசியில் வழிபட வந்தார்களாம். இதனை விரும்பாத சிவபெருமான் அவர்களுக்குக் காட்சி தராமல் குப்தகாசிக்கு வந்து நந்தி வடிவில் ஒளிந்திருந்தாராம். பஞ்சபாண்டவர்கள் இங்கு வந்து எப்படியோ கண்டுபிடித்து வணங்கி அருள் பெற்றார்களாம். குப்த என்ற சொல்லுக்கு ஒளிதல் என்று அர்த்தமாம். காசியிலிருந்து சிவபெருமான் இங்கு வந்து ஒளிந்திருந்ததால் இந்த இடத்திற்கு குப்தகாசி என்ற பெயர் வந்ததாம்.
குப்தகாசி விஸ்வநாதர் கோயில்

மூலஸ்தானத்தில் சிவலிங்கம். பின்னால் பார்வதி உருவம்.  அங்குள்ள பூசாரி இதனை சக்தி பீடங்களில் ஒன்று என்றார். விஸ்வநாதர்  கோயிலின் முனனால் ஒரு சிறிய நீர்த்தொட்டி(குளம்) அதன் ஒரு மூலையில் கோமுகி அமைப்பிலிருந்து நீர் விழுந்து கொண்டிருக்கிறது. 
திருக்கோயில் திருக்குளம்
இதனை மணிக்கர்ணகை குண்டு என்கிறார்கள். கோயிலின் ஒரு புறம் பெண்கள் அமர்ந்து கூட்டு வழிபாடு செய்து கொண்டு இருந்தனர். அர்த்தநாரீசுவரருக்கு தனிச்சந்நிதி உள்ளது. இங்கு அவ்வப்போது சிறுதூறல் இருந்தது. 
சீதாப்பூரில் நாங்கள் தங்கியிருந்த இடம்

வழியெல்லாம் சற்று வெப்பமாகவே இருநதது. மாலை 7.30 மணிக்கு சீத்தாப்பூர் சென்று சேர்ந்தோம். இங்கு தங்கும் இடம் வசதியாக இருக்கவில்லை. சீத்தாப்பூரில் நல்ல குளிர்.
சீத்தாப்பூர் தங்கும் விடுதியில் கொடிரோஜா

15.05.2012
அதிகாலை 4-30 மணிக்கு சீதாப்பூரிலிருந்து புறப்பட்டோம்.
சாலைகளில், மேலிருந்து கற்கள் சரியும் பகுதி-எச்சரிக்கைப்பலகை

கெளரி குண்ட்(அநேகதங்காவதம்)

காலை 7.00 மணிக்கு கௌரிகுண்ட் அடைந்தோம். நாங்கள் எங்களை அழைத்துச் செல்லும் வழிகாட்டி  ஆனந்திடம் முன்பே கூறி விட்டோம் - அநேகதங்காவதம் பாடல் பெற்ற ஸ்தலம் என்பதால் அதைப் பார்ப்பது எங்கள் பயணத்திட்டத்தில் முக்கியம், அதனால் அங்கு நீங்கள் நிறுத்திக் காண்பிக்க வேண்டும் என்று சொல்லி விட்டோம். அவர் கேதார்நாத் சீக்கீரம் போக வேண்டும்., தரிசனம் முடிந்து திரும்பி வருவதும் சீக்கிரம் வர வேண்டும். பாதை மோசமாக இருப்பதால் பெரிய பஸ் இரவு நேரத்தில் ஓடத்தடை விதித்திருக்கிறார்கள் .  நீங்கள் எல்லாம் வர வர உங்கள் எல்லோரையும் ஜீப்பில் தங்கும் இடத்திற்கு அனுப்பி விடுவேன் என்றார். சீக்கிரம் போனால் தான் டோலி  கிடைக்கும் என்றார். எப்படி என்றாலும் அநேகதங்காவதம் கோவிலைப் பார்ப்பதில் நாங்கள் உறுதியாக இருந்ததால், எங்களுக்கு அந்த இடத்தை காட்டி, சீக்கீரம் போய் வந்து விடுங்கள் என்றார். நாங்கள் அது போல் நாங்கள் விரைவாகச் சென்று தரிசித்து வந்தோம்.

இருப்பிடம்

கேதார்நாத் போக கொஞ்சதூரம் படியேற வேண்டும். படியேறும்போது. பாதி தூரத்தில் வலது புறம் திரும்பினால் கௌரிகுண்டம் உள்ளது. இது வெந்நீர்க்குளம். குளத்தின் ஒரு மூலையில் கோமுகியிலிருந்து வெந்நீர், குளத்தினுள் எப்போதும் விழுந்து கொண்டேயிருககிறது. பக்தர்கள் குளிக்க ஆண்களுக்குத் தனியாகவும் பெண்களுக்குத் தனியாகவும் இரண்டு வெந்நீர்க்குளங்கள் உள்ளன. தீர்த்தத்தைத் தலையில் தெளித்துக் கொண்டோம். 
கெளரிகுண்டம்-வெந்நீர் ஊற்று

கௌரிகுண்டத்திற்குத்  தென்புறம் கௌரி கோயில் உள்ளது. 
கெளரி தவம் செய்த இடம் இது என்று கூறப்படுகிறது. அநேகதங்காவதம் என்னும் பாடல் பெற்ற சிவத்தலம் இதுதான் என்று கருதப்படுகிறது.
(திருக்கயிலாயத்தின் கிழக்கு பரிக்கிரமத்தில் அமைந்துள்ள கெளரிகுண்டமே அநேகதங்காவதம் என்றும் சிலர் கூறுவார்கள்)

சூல முண்டுமழு வுண்டவர் தொல்படை சூழ்கடல்
ஆல முண்டபெரு மான்றன் அநேகதங் காவதம்
நீல முண்டதடங் கண்ணுமை பாகம் நிலாயதோர்
கோல முண்டள வில்லை குலாவிய கொள்கையே

என்று திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவனைப் பாடுகிறார்

இங்கு மூலஸ்தானத்தில் சிவபெருமான் இலிங்கவடிவில் அமைந்துளளார். 1 அடி உயரம்.  இங்கும் ஒரு சிறுகுளம் உள்ளது. அதில் கோமுகி உள்ளது.
திருஅநேகதங்காவதம் தேவாரப்பாடல் பெற்ற தலம்-கெளரிகுண்டம்


மூலஸ்தானம்

கெளரி குண்டத்தில் தீர்த்தம் சேகரித்துக் கொண்டு  சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தோம். அங்குள்ள பூசாரி, வந்தவர்களுக்காக ஆரத்தி காட்டாமல் இருந்த இடத்தில் இருந்து கொண்டு காணிக்கை மட்டும் கேட்கிறார்.
சுவாமி சன்னதிக்கு வெளியில் இருக்கும் அம்பாள் ஒற்றைக் காலில்  தபசு செய்யும்  காட்சி அழகாய் வடிக்கப்பட்டு இருக்கிறது.
ஒற்றைக்காலில் நின்று பார்வதி தேவி தவம்
கோவிலைச் சுற்றிலும் உள்ள சாதுக்கள் நம்மிடம் காசு கேட்கிறார்கள்.


.
கோவிலுக்கு போகும் பாதை எல்லாம் ஈரம் - காலை ஊன்றி நடக்க வேண்டும். இல்லையென்றால் விழநேரிடும்.


அநேகதங்காவதம் தரிசித்த பின் திருக்கேதாரம் செல்ல டோலி ஸ்டாண்ட் நோக்கிச் சென்றோம்.

திருக்கேதாரம் சென்று தரிசித்த செய்திகளை அடுத்த பதிவில் காணலாம்

 (தொடரும்)

Viewing all articles
Browse latest Browse all 789

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>