Quantcast
Channel: திருமதி பக்கங்கள்
Viewing all 789 articles
Browse latest View live

உழைப்பாளர் தினம்

$
0
0
இன்று உழைப்பாளர் தினம். (மே 1, 2018)
உழைப்பாளர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
Image may contain: 1 person, standing
மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது. இதில் எவ்வளவு பேரின் உழைப்பு  இருக்கிறது ! அவர்களுக்கு வேலை வாய்ப்பு,  திருவிழாவின் போது நாலு காசு சம்பாதிக்க முடிகிறது என்று சொல்லும் எளிமையான மக்கள். விழாக்களை நம்பி வாழும் மக்கள். உழைத்துப் பிழைக்க நினைப்பவர்கள்.
திருவிழாவின்போது எடுத்த எளிய மக்களின் படங்களை  உழைப்பாளர் தினத்தில் பகிர்கிறேன்.
 சித்திரைத் திருவிழாவில் கூட்டத்தில் தங்கள் பொருட்களை மக்கள் வாங்க மாட்டார்களா என்று கண்ணில் ஏக்கத்துடன் குழந்தைகள் இருக்கும் இடத்தையே சுற்றிச் சுற்றி வரும் பலூன்காரர்கள்.பஞ்சுமிட்டாய்க்காரர், பருத்திப்பால் விற்பவர்கள் ஆகியோரை எடுத்த படங்கள் .
Image may contain: 2 people
எத்தனை விதமான பலூன்கள்!
Image may contain: 1 person

Image may contain: 1 person
Image may contain: 1 person
Image may contain: 4 people, people smiling
Image may contain: 1 person
Image may contain: 1 person
Image may contain: 1 person
படிக்கும் வயதில்  வியாபாரி ஆகி இருக்கும் சிறுவன் (விடுமுறை வியாபாரமாய் இருந்தால் நல்லது)
Image may contain: 5 people, people smiling, crowd
Image may contain: one or more people, people standing and outdoor

Image may contain: 1 person, food
Image may contain: people sitting, indoor and food
இந்தக் கூடைகள்  அழகர் திருவிழாச் சமயம் மக்கள் அதன் மேல் பட்டுத்துணி சுற்றி தலையில் அணியும் தொப்பி. இந்தச் சமயத்தில் மட்டும் தான் விற்கும்.மற்ற நாட்களில் அவர்களுக்கு வியாபாரம் இருக்காது. பட்டு சுற்றிய தலைபாகை படம் நான் எடுத்த படம் இருக்கிறது, கண்டு பிடிக்க முடியவில்லை அதனால் கூகுள் படம்.

படம் கூகுள் -  நன்றி.

இப்படித்தான் பட்டுத்துணி சுற்றி அணிந்து கொள்வார்கள்.இந்த சமயத்தில் விற்றால் தான் அவர்களுக்கு நாலு காசு கிடைக்கும்.

விசிறி விற்கும் வயதான பெண்மணி

சித்திரை மாதம் வெயில் காலம்.  திருவிழா கூட்டத்தில்  பழைய ஆட்கள் இந்த விசிறியின் பெருமை உணர்ந்தவர்கள் மட்டுமே வாங்குவார்கள். இந்த வயதான அம்மாவிற்ற விசிறிகள் விற்றதா அவ்வளவும் என்று தெரியவில்லை, விற்று இருக்கும் என்று நம்புவோம். உழைத்து வாழ விரும்பும் ஆத்மா அல்லவா?

இப்போது பிளாஸ்டிக் விசிறிகள் கடை விளம்பரத்திற்கு திருவிழா காலங்களில் இலவசமாய் கொடுக்கிறார்கள்.
 அட்டை விசிறி வந்தது அதுவும் இப்போது போச்சு.
திருவிழாக்கள் நடந்தால் இறைவன் மனம் குளிர்ந்து மழையைத் தருவார் என்கிறார்கள்.
அழகர் அணிந்து வரும் ஆடையை வைத்து கணிக்கப்படுகிறது நாட்டு வளம்.
இந்த முறை பச்சை ஆடை அணிந்து வந்து இருக்கிறார் அழகர் . பசுமைபெருகும் , பயிர் பச்சை செழிக்கும் என்கிறார்கள். 
அப்படி செழித்தால் விவசாயிகளின் நிலை உயரும். நாடு நலம் பெறும்.





அன்றும் விவசாயிகள் நிலை மோசம். இன்றும் விவசாயிகள் நிலை உயரவில்லை.
பாடல்:- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள்.


காடு மேடு திருத்தி கழனி ஆக்கியோர் அன்று.   
ஏரி,குளம் குட்டைகளை தூர்த்து வீடு ஆக்கியது இன்று.

எங்கும் போராட்டம், கூலிப் பிரச்சனை, தண்ணீர் இல்லாமல் பயிர் செய்யமுடியவில்லை என்ற பிரச்சனை, உழைத்த  உழைப்புக்குச் சரியான கூலி கொடுக்காமல் ஏமாற்றும் தொழில் கூடங்கள்.   சம்பளம் நிறைய கொடுக்க வேண்டுமே வருடம் ஆக ஆக  என்று அவனுக்குக் கொடுக்கும் சம்பளத்தைப் பகிர்ந்து இரண்டுபேருக்குக் கொடுத்துவிட்டு அவனை வீட்டுக்கு அனுப்பும்  உழைப்பைச் சுரண்டும் தொழில் அதிபர்கள் 

உழைத்தவன் வேர்வை அடங்கும் முன் அவன் கூலியைக் கொடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அதிக வேலை, கூலி குறைவு. ஒரே வேலை ஊதியம் மாறுபடுகிறது இருவருக்கும் என்று  போராட்டங்கள் நடக்கிறது; ஊதியம் சமமாய் இருக்க வேண்டும் என்று.
உழைப்பவர்கள் நலம் பெற வேண்டும். உழைப்பே தெய்வம்! உழைப்பே உயர்வு  ! என்று வாழ்வோர் நிலை உயர வேண்டும்.

                                                                      வாழ்க வளமுடன்.


திருமலை நாயக்கர் மஹால்

$
0
0




இப்போது நடைபெறும் சித்திரை திருவிழாவை சிறப்பாக்கிய விழா நாயகர்.
அழகர் திருவிழாவையும், மீனாட்சி திருவிழாவையும் ஒன்றாக்கியவர்.
மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதியில் தன் மனைவிகளுடன் உள்ள சிலை இருக்கும்.

அடுத்த பதிவில்  திருமலை நாயக்கர் அரண்மனை  என்று  முந்திய பதிவில் தொடரும் போட்டேன். பசுமை நடை இயக்கத்துடன் சென்றதால் 10 மணிக்கு முன்பே சிறப்பு நுழைவு அனுமதி பெற்று உள் சென்றோம்..



மொட்டை மரத்திலும் கிளி
மணிக்கூண்டு
இப்போது எங்கள் குடியிருப்பு என்று உச்சிமேல் ஏறிச் சொல்கிறது புறா



டிக்கட் கொடுக்கும் வாசல் உள் நுழையும் இடத்தின் மேல் விதானம்
பத்துப் பல்லும் பயங்கர வலிமை -காலத்தை கடந்தும் இருக்கே!

தொல்லியல்  ஆராய்ச்சியாளர் திரு. சாந்தலிங்கம் அவர்கள், திருமலை நாயக்கர் காலம் அவர்களுக்கு பின் ஆண்டவர்கள் முதலிய வரலாறு சொல்கிறார். 


விஜயநகரம் உருவான கதையை நாம் பாடத்தில் படித்து இருக்கிறோம்.

ஹரிஹரர் புக்கர் என்ற இரு சகோதரர்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தை உருவாக்கியதையும் , புக்கரின் மகன் குமாரகம்பணன் மதுரையைக் கைப்பற்றி  மீனாட்சி கோவிலை மீட்டு சாம்ராஜயத்தை நிறுவியதையும்   சொன்னார்.

1929 முதல் 200 ஆண்டுகள் 13 அரசர்கள் ஆட்சி செய்த காலத்தைச் சொன்னார்.

நாகமநாயக்கர் கதை. அவர் மகனே (விஸ்வநாத நாயக்கர்) அவரைச் சிறைப்பிடித்த கதை, கிருஷ்ணதேவராயர் விஸ்வநாத நாயக்கருக்கு மதுரை அரசைக் கொடுத்த கதை,  விஸ்வநாத நாயக்கர் அமைச்சர் அரியநாத முதலியார் திறம்பட நாட்டை ஆள 72 பாளையங்களாக பிரித்த விவரம் ஆகியவற்றைக் கூறினார். இப்படி அரசாண்ட நாயக்கர்களில் திருமலை நாயக்கரும், ராணி மங்கமாளும்  இன்றளவும் பேசப்படுபவர்கள். இவர்கள் காலம் பொற்காலமாக இருந்தது. போர் இல்லாமல் அமைதியாக இருந்தது.

திருமலை நாயக்கர் கால ஆட்சியில் கலை, விழாக்கள் சிறப்பாக இருந்ததைச் சொன்னார். அவருக்கு மண்டைச்சளி நோய் வந்த போது மீனாட்சியம்மை கனவில் வந்து  திருச்சி போகாமல் இங்கேயே இரு நோய் குணமாகும் என்று சொன்னதாகவும் மறுநாள் அவர் நோய் தீர்ந்ததாகவும் சொன்னார். மீனாட்சியம்மைக்குக் கொடுத்த வாக்குப்படி தலைநகரைத் திருச்சியிலிருந்து மதுரைக்கு மாற்றி அரசாண்டார்.

கடைசியாக ஆண்ட ராணி மீனாட்சிக்குக் குழந்தைகள் இல்லை . சூழ்ச்சியால் மீனாட்சிக்கு பின் நாயக்கர் அரசு முடிவுக்கு வந்து விட்டது.

சென்னை ஆளுநராகயிருந்த நேப்பியர்  அவர்கள் மதுரைக்கு வந்து இந்த அரண்மனையை ப்பார்த்து வியந்து அரண்மனையைப் புதுப்பிக்க ரூ5 லட்சத்திற்கு மேல்நிதி  ஒதுக்கினார்.   நீதிமன்றமாய் செயல்பட்ட  அரண்மனை 1975 க்குப் பின் தொல்லியல் துறை வசம் வந்து விட்டதை விரிவாகச் சொன்னார்.

திருமலை மன்னர் காலத்தில் ஏரிகள் உருவானது, கோவில்களும் அதிகம் கட்டப்பட்டது.
கிறித்துவ மத போதர்களை ஆதரித்தார், இஸ்லாமிய  தர்காவை ஆதரித்தார், சைவ, வைணவ ஆலயங்களுக்குத் திருப்பணிகள் செய்து இருக்கிறார். புதிதாகக் கட்டியும் இருக்கிறார்.

இந்த திருமலைநாயக்கர்மஹாலை இத்தாலியர் வடிவமைத்தார். இந்திய இஸ்லாமிய ஜெர்மானிய கலை என்றும் இந்தோ-சார்சானிக் கலை என்று அழைக்கப்படுகிறது என்றார்.
இப்போது அரண்மனை இருப்பது நான்கில் ஒரு பங்குதான் என்றும்  சொன்னார். மீண்டும் இதை புதுப்பிக்க ரூ.4கோடி தொல்லியல் துறை ஒதுக்கி இருப்பதைச் சொன்னார்.

இவ்வளவு செலவு செய்வதால் இதனைப் பாதுகாப்பது நம் கடமை என்றார்.


பின்னர்  எழுத்தாளர்  அர்ஷியா அவர்களுக்கு மெளன அஞ்சலி செய்யப்பட்டது. (மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் அவர் . அன்றைய முந்தினம் சனிக்கிழமை மாரடைப்பால் காலமானார் )

 மாலை அவர் வீட்டில் நடக்கு இறுதி அஞ்சலியில் கலந்து கொள்பவர்கள் கலந்து கொள்ளலாம் என்றார்.  

இந்த சிம்மாசனம் பழைய சிம்மாசனம் இல்லை 

பாடத்தில் படித்தது -ஒருவராகத் தூண்களை கட்டிப்பிடிக்க முடியாது என்று


மேல் பகுதி உடைந்து விழுந்து இருப்பதால் அந்தப் பகுதிக்குப் போகத் தடை 
கயிறு கட்டி வைத்து இருக்கிறார்கள்.
ஒலியும், ஒளியும் முன்பு பார்த்து இருக்கிறோம் இங்கு

புறாக்கள் மட்டும் மில்லை- தேனீக்கூடுகளும்  உண்டு, இரண்டு மூன்று இடங்களில் இருந்தது.
கலசங்களிடையே  சின்ன பறவை நானும்  இருக்கிறேன் என்று சொல்கிறது. வானம் அழகாய் இருந்தது.
தூண்களில் ஜன்னல் வேலை செய்த  சூரிய ஒளி


இந்தத்  தூண் பக்கம் இருக்கும் ஜன்னலில் அமர முடியாதபடி ஆணி போன்ற அமைப்பைச் செய்து வைத்து இருக்கிறார்கள், ஜன்னல் மேல் ஏறிச் சுவர் மேல் புறம் எல்லாம் பேர்களை எழுதி வைத்து இருக்கிறார்கள்.
அரண்மனையின் பின் பகுதி

பின் வாசல் வழி எடுத்த படம்

நிறைய அழகிய கலை அம்சத்துடன் உள்ள  சிலைகள் இங்கு இருக்கிறது.
ஒவ்வொரு கோணமும் அழகுதான்
2012ல் பார்த்த போது   விதானம் மிக அழகாய் இருந்தது , இப்போது  வண்ணம் குறைந்து விட்டது
நரசிம்மர் பக்கத்தில் இருக்கும் அலமாரிகளில் இப்போது காலியாக இருக்கிறது.   பராமரிப்பு வேலை நடைபெறுகிறது என்று போட்டு இருந்தார்கள்.
அருங்காட்சியகம் 
கிணறு தோண்டப்பட்ட வரலாறு
இந்த அரண்மனையைப் பராமரிக்க ஆகும் செலவு ரூ4 கோடியாம் 
ஆனால் நம் மக்கள் இப்படித் தூண்களில் தங்கள் பெயர்களைச் செதுக்கிப் பாழ் செய்கிறார்கள் , கண்காணிப்புக் கேமிரா பொருத்தி, காவலுக்கு ஆட்கள் போட்டால் நல்லது. 

                                                        வாழ்க வளமுடன்.

மணிப்புறாவும் குஞ்சுகளும்

$
0
0
இந்த மணிப்புறா   படம் நான் மகன் வீட்டுக்குப் போனபோது எடுத்தபடம்

இரண்டு முட்டைகள்.


மகன் வீட்டில் தோட்டத்தில்  (அரிசோனா) போகன்வில்லா(காகிதப்பூ )கொடிக்கிடையில்  மணிப்புறா கூடு கட்டி முட்டையிட்டு இருப்பதை  போட்டோ எடுத்து அனுப்பினான் . எனக்குப் பிடிக்கும் என்று.

 குஞ்சு பொறித்தவுடன் பார்த்து படம் எடுத்து அனுப்பு என்றேன் அதன் வளர்ச்சிகளைப் படிப்படியாக அனுப்பினான். பேரன் தினமும்  பார்த்து அதன் வளர்ச்சிகளை மகிழ்ச்சியுடன் சொல்வான், பெரிதானபின்னே சொல்லும் போது  இரண்டு குஞ்சும் அம்மா மாதிரி ஆகி விட்டது என்றான்.
எந்த மறைப்பும் இல்லாமல் தெரிகிறது முட்டைகள்

பின்னால்  ஊஞ்சல் கட்டி இருக்கும்  இடம்.  அதன்   அருகில் இருக்கும் தூணில் போகன்வில்லா கொடி சுற்றி இருக்கும். மிகவும் பக்கத்தில் கூடு கட்டி இருப்பதால் பின் பக்கம் போவதைக்  கூடுமானவரை தவிர்த்து வந்து இருக்கிறார்கள் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற, பறவை இரை தேடப் போகும் போது போய் தண்ணீர்  ஊற்றி விட்டு உணவும் தண்ணீரும் பறவைகளுக்கு வைப்பதை வைத்துவிட்டு வருவார்களாம். நிறைய பறவைகள் வரும் தோட்டத்திற்கு.


அடைகாக்க ஆரம்பித்து விட்டது.

கறுப்புப் பூனை ஒன்று அடிக்கடி தோட்டத்திற்கு வரும், இரவு ஆந்தை வரும், காலையில் கழுகு வரும். அவைகளிடமிருந்து எப்படி தப்பித்து அவை பெரிதாகும் என்று கவலை ப் பட்டுக் கொண்டு இருந்தார்கள்.
குஞ்சுகள் கொஞ்சம் பெரிதாகி விட்டன.
குஞ்சுகளின் மூச்சுத் துடிப்பு தெரியுது.
அம்மாவின் வரவைப் பார்த்துக் கொண்டு இருக்கிறது.
வெயிலில் முகம் காட்டாமல் குனிந்து இருக்கிறது.

உணவைக் குஞ்சுக்கு ஊட்டும் போது இரண்டுகுஞ்சும் தாயின் வாயில் உணவு எடுக்கும் காட்சி
மாடி பால்கனியிலிருந்து எடுத்த படம்
தோட்டத்தில் வந்து பின் பக்கமிருந்து எடுத்தபடம்.  குஞ்சைப் பாதுகாக்க பயப்படாமல் அமர்ந்து இருக்கிறது.
அம்மா வெளியே போய் இருக்கும்போது எடுத்த படம்
அதன் இறகுகள் அழகாய் இருக்கு இல்லையா?
ஒரே போல் பார்வை
ஒரு குஞ்சு அம்மாவின் அடியில்.

சிறகுகள் முளைத்து விட்டால் பறந்து போய்விடும்தானே! 
இரண்டு நாள் முன் பறந்து போய் விட்டது போல என்றான்,  தாய்ப் பறவை மட்டும் கூட்டில் இருந்ததாம் சிறிது  நேரத்தில் அதுவும் பறந்து போய் விட்டதாம். எங்கிருந்தாலும் நலமாய் இருக்கட்டும்.

                                                           வாழ்க வளமுடன்!
                                                              ------------------------



இயற்கை ஆர்வலர்கள் தந்த நல்ல செய்தி

$
0
0

Image may contain: one or more people

இன்று காலை தொலைக்காட்சியில் கேட்ட நல்ல செய்தியைப் பற்றி உங்களுடன்  .
காலை 9 மணி சன் செய்தியில்  இந்த செய்தியைச் சொன்னார்கள். சென்னையில்  இயற்கை ஆர்வலர்கள் வீட்டுக்கு இரண்டு மண்பானை வழங்கி பறவைகளுக்குத் தண்ணீர் வைக்க  சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அவசரமாய் போட்டோ எடுத்தேன். எந்த ஏரியா என்று தெரியவில்லை.

பேசுபவருக்குப் பின் பக்கம் உள்ள போஸ்டரில்  உலகம் முழுவதும் காடுகள் வளர்த்து  மழை தந்து நம்மைக் காக்கும்  பறவைகளை நாம் காப்போம் என்று எழுதி இருக்கிறது.

ஒருவர் பேசுவதைக் கொஞ்சம் காட்டினார்கள். வார்தா புயலால் சென்னையில் மரங்கள் இல்லாமல் கடும் கோடையில் மழை இன்றி தண்ணீர் இன்றி  பறவைகள் தவிக்கிறது. அதனால் வீடுகளில் தோட்டங்களில்  இரண்டு மண் பானைகளில் நீர் நிரப்பி வையுங்கள் என்று பேசினார்.
Image may contain: coffee cup
மண்பானை குளர்ச்சியாக இருக்கும், பறவைகள் குடிக்க, குளிக்க வசதிதான்.

Image may contain: one or more people
தோட்டத்தில் வைக்கிறார் மண் பானைகளை.

ஒவ்வொரு கோடையிலும் பத்திரிக்கைச் செய்தியாக வரும். படித்து இருக்கிறோம்:-

கோடையில் வெப்பம்  கடந்த ஆண்டைவிட அதிகமாய் இருக்கிறது.

மக்களும், மற்ற உயிரினங்களும் கோடையில் மிக அவதிப்படுவதையும்  பறவைகள் நீர் தேடித் தவிப்பதையும் கண்டிப்பாய்ச் சொல்வார்கள்.
பறவைகள் தண்ணீர் கிடைக்காமல்  சென்ற ஆண்டு கூட்டம் கூட்டமாய் செத்து மடிவதைக் காட்டினார்கள்.

கோடையிலே நீர்தேடித் தவிக்கும் பறவைகள் 

என்று முன்பு நான் எழுதிய பதிவைப் படிக்க விருப்பம் இருந்தால் படிக்கலாம்.
ஒவ்வொரு கோடையிலும்  பதிவுகள் போட்டு இருக்கிறேன். பத்திரிக்கை, தொலைக்காட்சியில் வரும் புது ச்செய்திகளுடன். இந்த ஆண்டும் ஒன்று கிடைத்து விட்டது.



No automatic alt text available.

நானும் எங்கள் வீட்டில் பால்கனியில் உணவும் தண்ணீரும் வைத்து இருக்கிறேன். மண் தொட்டியில் குடிக்க நீலநிற பிளாஸ்டிக் தொட்டி குளிக்க நீச்சல் குளம். (தற்போது மட்டும் தான்  இந்த பிளாஸ்டிக் தொட்டி இன்னொரு  பெரிய மண் தொட்டி வாங்க வேண்டும்.)  மண் தொட்டி புறா குளிக்க போத மாட்டேன் என்கிறது.

நல்ல செய்திகளை "எங்கள் பிளாக்"தளத்தில் சனிக்கிழமை பகிர்ந்து கொள்வார்கள். நான் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு நல்ல செய்தியை இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.

எல்லோர் வீடுகளிலும் தண்ணீரும் உணவும் வைப்பீர்கள் பறவைகளுக்கு .
வைக்காதவர்கள் இனி வைக்கலாம் தானே.

வாழ்க வளமுடன்.

மீனாட்சி அன்னையின் அன்னை

$
0
0
இன்று காலை புதுமண்டபத்திற்குப் பக்கத்தில் இருக்கும் காலபைரவரைத் தரிசனம் செய்து வரலாம் என்று போய் இருந்தோம்.

நாங்கள் போன நேரம் காலை மணி  7.30 , அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்து கொண்டு இருந்தார்கள் அதனால் எட்டுமணி ஆகும், வெளியில் அமருங்கள் என்று குருக்கள் சொன்னார்.

அதற்குள் பழைய சொக்கநாதரைத் தரிசனம் செய்து வந்து விடலாம் என்று பழைய சொக்கநாதர் கோவில் போனோம். சொக்கநாதருக்குக் காலை அபிஷேகம் நடந்து முடிந்தவுடன் தீபாராதனை காட்டி அபிஷேக விபூதி அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. 

மீனாட்சி அபிஷேகம் முடிந்து அலங்காரம் ஆகி இருந்தது. மஞ்சள் புடவையில் மங்கலகரமான தரிசனம்.  குங்கும பிரசாதம் பெற்றுக் கொண்டு கோவிலை வலம் வந்தோம்.

முருகன் தெய்வானையுடன் மட்டும் காட்சி கொடுத்தார் உற்சவ மூர்த்தியாக. அடுத்து லிங்கோத்பவர் , சண்டேஸ்வரர், இடைக்காட்டு சித்தர்  ஆகியோரைத் தரிசனம் செய்தோம். நடராஜர், சிவகாமி கல்லில்  வடிக்கப் பட்ட சிலை அழகாய் இருந்தது.

சின்ன நவகிரக சிலைகள், அம்மன் முன்புறம் விநாயகர், சுவாமி முன்  ஆறுமுகரும், பழனி ஆண்டவ முருகனும் இருந்தார்கள். தரிசனம் செய்து விட்டு  நாங்கள் பைரவரைத் தரிசனம் செய்யப் போனோம்.

பைரவர்  பெரிய மூர்த்தியாக இருந்தார்.பைரவர் சன்னதி முன் விநாயகர், முருகன் இருந்தனர். உட் பிரகாரத்தில்  பைரவ அஷ்டகம்,  பைரவர் அஷ்டோத்திர பாடல்கள் அடங்கிய பலகைகள் இருந்தன சுவற்றில்.




பின் அங்கிருந்து   மொட்டைக் கோபுரம் சென்றோம். கோபுரத்தைப் பார்த்து விட்டு வீட்டுக்குப் போகலாம் என்று கிளம்பிய போது "மீனாட்சி அம்மன் தாயார் காஞ்சனமாலை அம்மன் கோவில்"என்ற அறிவிப்புப் பலகையைப் பார்த்து அங்கு சென்றோம்.

உள்ளே சென்றவுடன் வலது புறத்தில் மலயத்துவசபாண்டியன், காஞ்சனமாலை இருவரும் அரசவையில் இருக்கும் கோலத்தில் இருக்கிறார்கள். சுதைச் சிற்பங்களாய் இருக்கிறார்கள்.

அவரைத் தரிசனம் செய்து தாழ்வான வாசலில் குனிந்து போனால் சுவாமி சன்னதி. குனிந்து வரவும் என்ற வாசகம் எழுதப்பட்டு இருக்கிறது சுவற்றில்.

அங்கும்  காலை அபிஷேகம் ஆக ஆயத்தம் செய்து கொண்டு இருந்தார் குருக்கள்.

அம்மனும், சுவாமியும் ஒரே கருவறையில் இருக்கிறார்களாம், சுவாமி மட்டும் தெரிந்தார் அம்மனைப் பார்க்க முடியவில்லையே என்ற போது காலை 9 மணிக்கு மேல் தான் பார்க்க முடியும் என்றார்கள் பூஜை முடிந்தவுடன் உள்ளே அனுமதிப்பார்களாம். 

வெளியே நவகிரக சன்னதி. நவகிரகங்கள் தங்கள் மனைவிகளுடன் இருந்தார்கள். கேது பகவான் தாடி எல்லாம் வைத்துக் கொண்டு, நாமம் அணிந்து பார்க்க நரசிம்மர் போல் காட்சி அளித்தார்.

அடுத்த முறை அம்மனைத் தரிசனம் செய்யலாம் என்று வந்து விட்டோம்.
அன்னையர் தினத்தில் உலக மக்களின் அன்னை மீனாட்சி அன்னையின் அன்னையைத் தரிசனம் செய்த மன நிறைவுடன் வீடு வந்து சேர்ந்தோம்.
அன்னையர் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். அன்னை மனம் கொண்ட தாயுமானவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

என் அன்னையும் நானும்.
Image may contain: 2 people, including Gomathy Arasu

Image may contain: 2 people, indoor
கணவரின் அன்னை
காலபைரவர் திருக்கோவில்  முன்னால் கடை - பக்கவாசல் வழியாக உள்ளே போனால் பைரவர் கோவில்

கோவில் பக்கத்தில் அழகர் திருவிழா சமயம் கருப்பண்ணசாமி போல் வேடம் அணிந்து வருபவர்களுக்கு ஆடை அலங்காரப் பொருட்கள்.

பழைய சொக்கநாதர் கோவில்
தனியாகக் காளைவாகனத்தில் மீனாட்சி
கணவன் , மனைவி குழந்தைகளுடன் -தனியாக- சுவாமியுடன் சேர்ந்து என்று காட்சிகள்
மொட்டைக்கோபுரம்
கலைவேலைப்பாடுகளைப் பார்க்க முடியாமல் அதன் அருகே கடைகள்

விற்பனைப் பொருட்கள் அடங்கிய மூட்டைகள்- கலைஅம்சம் பார்க்க முடியாது
மீனாட்சி அன்னையின் அன்னை கோவில்

வெண்கொற்றக் குடையின்கீழ்  மலையத்துவசபாண்டியன், காஞ்சனமாலை


கோபுர வாசல்

வெயிலுக்கு ஏற்ற நுங்கு, பதனி எல்லாம் வண்டியில் வியாபாரம் செய்கிறார்
பழைய சொக்கநாதர் கோவில் பக்கம்.
------------------------
வாழ்க வளமுடன்.
----------------------------------

கிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா

$
0
0
மகனுடைய  ஊருக்கு (PHOENIX) நாங்கள் போயிருந்தபோது  வாரவிடுமுறையில் சற்றுத்தொலைவில் உள்ள Grand Canyon என்ற   இடத்திற்கு அழைத்துச் சென்றான் மகன்.

அமெரிக்காவில் 400 தேசிய பூங்கா உள்ளன. அதில் இதுவும் ஒன்று.


இந்த பள்ளத்தாக்கில்  மாலைச் சூரியன் மறையும் போது ஒரு அழகு, காலை ஒரு அழகு. அங்கு இரண்டு நாள் தங்கிப் பார்த்தோம்.
நிறைய இடங்கள் கைலாயம் போல் காட்சி அளிக்கிறது.
சிவன் கோயில், விஷ்ணு பாதம், என்றெல்லாம் பெயர் கொடுத்து இருக்கிறார்கள்.
பார்ப்பவர் கண்ணுக்குத் தோன்றும் கற்பனைக்கு ஏற்ற மலை அழகு.
நிறைய இடங்களில் இருந்து மலையின் அழகையும் பள்ளத்தாக்கையும், ஓடும் கொலராடோ ஆற்றின் அழகையும் பார்க்கப் பாதுகாப்பான கம்பித் தடுப்புகள் உள்ளன.
பாதுகாப்பற்ற மலையின் விளிம்பில் நின்று பார்க்கும் பயத்தை வென்றவர்களும், விதிமுறைகளைக் கடைப்பிடிக்காதவர்களும் நமக்கு அச்சத்தை ஏற்படுத்தினார்கள்.
Image may contain: tree, sky, outdoor and nature
காலையில் தெரிந்த  நிலா
Image may contain: sky, mountain, outdoor and nature

Image may contain: sky, mountain, outdoor and nature
நடுவில் இருக்கும் மலை கைலாயம் போல் காட்சி அளிக்கிறது.
Image may contain: mountain, sky, outdoor and nature

Image may contain: mountain, sky, outdoor and nature
                                       விஷ்ணு பாதம் என்கிறார்கள்.
Image may contain: mountain, sky, outdoor and nature
                           ஒவ்வொரு மலையும் ஒவ்வொரு அழகு.
Image may contain: mountain, outdoor and nature
மாலைச் சூரிய ஒளியில் தங்கம் போல் ஜொலிக்குது மலை
Image may contain: mountain, sky, outdoor and nature
வெயில் படும் இடம் தங்கம் போலவும்  மற்ற இடங்கள் சிவப்பாகவும் தெரிகிறது.
Image may contain: sky, outdoor and nature
                                               மாலை அழகு
Image may contain: mountain, sky, outdoor and nature

Image may contain: sky, mountain, outdoor and nature



Image may contain: mountain, outdoor and nature
 கொலராடோ ஆற்றின் அழகு வெகு ஆழத்தில் போகிறது இந்த 446 கி.மீட்டர் தூரம் ஓடுகிறது.  பலவகையான மண் , கல், அடுக்குகளை அரித்துக் கொண்டு இப்போது கீழே ஓடிக் கொண்டு இருக்கிறது. இரண்டு பில்லியன்(2,000, 000 , 000) 
 ஆண்டுகள் பழைமையான  பாறைப் பகுதிகள் கீழே அமைந்துள்ளன. 


ஆற்றின் அழகைக் கம்பித்தடுப்பு வழியாகப் பார்க்கலாம்.
பயமே இல்லாமல் கம்பித்தடுப்பு இல்லா இடத்தில் மக்கள்.

Image may contain: one or more people, sky, mountain, cloud, outdoor and nature
கம்பித்தடுப்பு இல்லா இடத்திற்குச் செல்லவேண்டாம் என்று அறிவிப்புகள் வைத்து இருந்தாலும்  பயத்தை வென்ற மக்கள் நமக்கு அச்சத்தை வரவழைத்தனர்.

பாதுகாப்பான எங்கள் கண் பார்வையில் பேரனின் சாகச போஸ்


Image may contain: 2 people, people standing, sky, outdoor and nature
குளிர் காற்று நம்மைப் பயமுறுத்துகிறது, அதை மீறி ,படம் எடுப்பவர் சொல்படி சிரிப்பு

பள்ளத்தாக்கிலிருந்து நடந்து செல்ல  ஏற்பாடு செய்து தருகிறார்கள்.

Image may contain: bird and outdoor

கிராண்ட் கேன்யானில் தண்ணீர் தேடித் தவிக்கும் சிட்டுக்குருவிகள்.
குடி தண்ணீர் இருக்கும் குழாய்க்குக் கீழ் சிந்திக்கிடக்கும் நீர்த் துளி தேடிப் பருகும் குருவிகள்.
கொடைக்கானலில்  ஆங்காங்கே தண்ணீர்த் தொட்டிகளை மலையில் வைத்து இருப்பார்கள் பறவைகள் நீர் பருக. அது போல்  அவைகளுக்குத் தண்ணீர்த் தொட்டிகள் அமைத்து இருக்கலாம்.
Image may contain: sky, tree, plant, cloud, bird, outdoor and nature
கிராண்ட் கேன்யானில்  தங்கி இருந்த விடுதி அருகில் இருந்த மரத்தில்  காலை நேரம்  பள பள என்று மின்னிய  காக்கா- பைன் மரத்தில்  
Image may contain: sky, tree, cloud, plant, bird, outdoor and nature
                           அதன் சத்தமும் கொஞ்சம் வித்தியாசம்.
                                                               நல்ல  உடல்  வாகு.

Image may contain: mountain, sky, outdoor and nature
கிராண்ட் கேன்யானில் பார்த்த காகம்.
இங்கும் காகம் இருக்கிறது, ஆனால் அண்டங்காக்கை மட்டும் தான் இருக்கிறது.. அதன் உடல் இரட்டைவால் குருவியின் உடல் போல் நல்ல கருமையாய்ப் பட்டுப்

போல் மின்னுகிறது. நல்ல உடல்வாகைப் பெற்று இருக்கிறது. கழுகு போல் மிக உயரத்தில் பறக்கிறது.

காக்கை மேல் விருப்பம் இல்லை இங்கு இருப்பவர்களுக்கு. அதற்கு உணவளித்து அதை பழக்கப்படுத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறார்கள். அது அந்நியப் பறவையாம், மற்ற பறவைகளுக்கும் , உயிரினங்களுக்கும் இடைஞ்சலாக இருக்கிறதாம்.

இங்கு அரியவகை பறவைகளும், விலங்குகளும் இருக்கிறதாம்.

மகன்  வீட்டில் (அரிசோனாவில்) வைக்கும் உணவுக்குப் பல பறவைகள் வந்து இருக்கிறது, காகம் மட்டும் நான் அங்கு இருக்கும் வரை  வரவில்லை.
மகன்  ஊரிலும் அண்டங்காக்கைகள் தான் இருக்கிறது.

இன்னும் இருக்கிறது சில இடங்கள் கிராண்ட் கேன்யானில் அவை அடுத்த பதிவில்.
                                                                       வாழ்க வளமுடன்.
--------------

கிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா- பகுதி 2

$
0
0



"கால் வலிக்குது தூக்கிச் செல்" (நண்பர்கள்)
அமெரிக்கக் கட்டிடக் கலை நிபுணரும் வடிவமைப்பாளரும்  ஆகிய மேரி கோல்ட்டர் என்னும் பெண்மணியால் உருவாக்கப்பட்ட காட்சிக் கோபுரம் இங்கு உள்ளது.இதன் உள்ளே படிவழியாக மேலே சென்று கிராண்ட் கென்யானையும் கொலொராடோ ஆற்றையும் காணலாம். இந்தக் கோபுரத்தின் ஒவ்வொரு கல்லும் பேசும் ஓவியங்களைக் கொண்டுள்ளது.முக்கோண வடிவிலும்,வைரத்தின் வடிவிலும் அமைந்த பாறைகளில் வண்ணப்பட்டைகள் அமைந்துள்ளன. T வடிவிலான கதவுகளும்,ஒடுங்கிச் செல்லும் சன்னல்களும் உள்ளன. கரடு முரடாக உள்ள கற்களின் புறப்பரப்புகள் வினோதமான நிழல்களை ஏற்படுத்துகின்றன.

இந்த அறிவிப்புப் பலகையில்  இங்கு பருவநிலை திடீர் திடீர் என்று மாறும் அதனால் கவனமாய் இருக்க வேண்டும் என்றும், மழை, இடி, மின்னல், புயல் எல்லாம் திடீர் என்று ஏற்படும் அதனால்  உள் பகுதிக்குள் நடந்து போவதை தவிர்க்க வேண்டும் என்றும் வளர்ப்புப் பிராணிகளைக் கவனமாய்ப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்றும், ஜிபிஎஸ் உதவி சில நேரம் இதற்குள் வழியைச் சரியாக காட்டாது, கவனமாய் இருக்க வேண்டும் என்றும் போட்டு இருக்கிறது.

காட்சிக் கோபுரம் போகும் வழியில் மண்ணுக்குள்ளிருந்து எலி போன்ற ஒன்று  வலை தோண்டிக் கொண்டு இருந்தது.


அதன் முகம் அதன் மீசை சீல் விலங்கை நினைவுபடுத்தியது எனக்கு
அதன் நான்கு பல்லும் நல்ல பெரிதாக இருந்தது
பேரனும் மருமகளும்


கோபுரத்தின் உள் புறம் மேல் புறம் 

மர ஆசனம் குளிர் காயும் இடம்
முதலில் ஏறும் இடம் மட்டும் கொஞ்சம் குறுகலாக இருக்கிறது.

அடுத்த தளம் செல்ல நல்ல தாராளமாய் ஏறுவதற்கு வசதியாக உள்ளது படிகள்.
ஏறும் போதே மேல் தளத்தில் வரைந்து இருக்கும் ஓவியங்களைப் பார்த்துக் கொண்டே செல்லலாம்.
மேல் விதானத்திலும் அழகிய ஓவியங்கள்- பழங்குடியினரின் ஓவியங்கள்
அவர்கள் வாழ்க்கை முறைகள் எல்லாம் ஓவியமாய் இருக்கிறது


மரத்தினால் செய்த ஆசனங்கள்

சோளக் கதிர் சாப்பிடும் பறவை


மேலிருந்து எடுத்தபடம்


மேல் பகுதியில்  இருந்து  அழகான காட்சிகளைக் காணலாம் சூரியனும்  நம்மைப் பார்க்கிறார்
மேல்தளத்திலிருந்து கண்ட அழகிய பள்ளத்தாக்குக்  காட்சிகள்.


கொலொராடோ ஆற்றின் அழகைக் காணலாம்


                         ஆறு வளைந்து வளைந்து போகும் காட்சி அழகு

                                                  ஜன்னல் வழியாகப் பார்த்த காட்சி.

மஞ்சள் புற்களும், கரும்பச்சை மரங்களும்,  நீண்ட தூரம் செல்லும் பாதையும் அழகு
                     பாதை நடுவில் கற்களால் அழகாய் ஒரு மலர் இதழ்கள்.


                                                    இதில் விளக்கு எரிகிறது


கம்பித் தடுப்பு வழியாகப் பள்ளதாக்கின் அழகைப் பார்க்கலாம் பாதுகாப்பாய்.

 அமெரிக்கப் பழங்குடியினர் வாழ்ந்த பகுதிகள், மற்றும் அவர்களின் கைவினைப் பொருட்களை விற்பனை செய்யும் கடை எல்லாம் அடுத்த பகுதியில்.
வாழ்க வளமுடன்.

---------------------------------------------------------------------------------------------------------------------------


அமைதி புறாவே அமைதி புறாவே அழைக்கின்றேன் உன்னை

$
0
0




Amaithi Purave Song- Sung By P. Susheela

இந்த பாடலை YouTube ல் பகிர்ந்த  வாசுகி பிரபா அவர்களுக்கு நன்றி.

"தாயே உனக்காக"என்ற படத்தில் வந்த பாடல். எனக்கு பிடித்த பாடல்.



Image may contain: bird and shoes



Image may contain: bird and outdoor



Image may contain: bird and outdoor



Image may contain: bird



என் வீட்டுக்கு வந்த வெள்ளைப் புறாக்களை  பார்த்தவுடன் மனதில் தோன்றிய எனக்கு பிடித்த பாடல். ஏகாந்தன் அவர்கள் இந்த பாடலை  கேட்டதில்லை என்றார் அதனால் இந்த பாடல் பகிர்வு.



                                                                  வாழ்க வளமுடன்.





என் ஜன்னல் வழியே

$
0
0
எங்கள் குடியிருப்புக்கு வரும் பறவைகள். என் பொழுது போக்கு -பறவைகளைக் கண்டு ரசித்தல். அவைகளைப் பார்ப்பது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.

முகநூல் பக்கத்தில் 'என் ஜன்னல் வழியே'என்று அடிக்கடி பகிர்ந்து வரும் படங்களின் தொகுப்பு.

காமிரா,  மொபைல் போன்  இரண்டிலும் எடுத்த படங்கள். 

புறாவும்,  சிட்டுக் குருவியும்  


எதிர்ப் பக்க வீட்டில் உணவு சாப்பிடும் பறவையை  என் ஜன்னல் வழியாக எடுத்த படம்

மிக ஓரமாய் இருக்கிறதே!   (அடுக்களை பக்கத்தில் உள்ள ஜன்னல் வழி  எடுத்த படம்)
சாப்பாடு இல்லையே என்று கழுத்தை வளைத்து பாக்குது.

இந்த பறவை பெயர் Rufous treepie என்று கூகுள் இமேஜ்  பறவைகள் படத்தில் போட்டு இருக்கிறது.
கூப்பிடுகிறது சாப்பாடு கேட்டு

எங்கள் குடியிருப்பு மதில் பக்கம் இருக்கும் கொடுக்காப்புளி மரத்தில் அமர்ந்து இருக்கும் பச்சைகிளி (எங்கள் வீட்டு பால்கனியிலிருந்து எடுத்த படம்)
எங்கள் குடியிருப்பு  மரத்தில் கருங்குயில்
எங்கள் வீட்டு டி.வி ஒயரில் ஊஞ்சலாடும் குருவி

பாபம் போல் பார்க்கும் புறா

கோபப் பார்வை பார்க்கும் மைனா
ஜன்னல் வழியே அன்புச்  செல்லங்களை



இன்னும் நேரம் ஆகுமோ என்று யோசிக்கிறது
எங்கள் வீட்டில் சாப்பிடும் பறவை
எங்கள் வீட்டில் வைத்த உணவுப்  பருக்கையைக் கொத்தி வாயில் வைத்துக் கொண்டு எதிர் வீட்டு மேல் மாடி கொடிக் கம்பியில் உட்கார்ந்து பார்க்கிறது.

இந்த புல் புல் பறவை  அடிக்கடி அமரும் இடம். அவர்கள் வீட்டு கண்ணாடி(பால்கனிக்கு கண்ணாடி தடுப்பு போட்டு அடைத்து இருப்பார்கள்) ஜன்னலில் தன் முகத்தை பார்த்தே கொத்திக் கொள்ளும் சில வேளைகளில்
எங்கள் வீட்டில் சாப்பாட்டுத் தட்டில் அமர்ந்து வேடிக்கை பார்க்குது


எதிர் வீட்டில் வித்தியாசமான கலரில் புறா
Image may contain: bird
பாடும் பறவை (வானம்பாடி)
Image may contain: bird
காக்கா நிறைய வரும் .அவற்றைத் தனிப் பதிவாய்ப் போட எடுத்து வைத்து இருக்கிறேன். முன்பு  "குண்டு காக்கா"என்று எழுதிய கதைக்குக் காக்கா படம் கிடைக்காமல் நம் ராமலக்ஷ்மியிடம் கேட்டு அவர் கொடுத்தார் அழகான குண்டு காக்கா படம். 
Image may contain: bird
எதிர்ப்பக்கத்தில் கடைசி வீட்டுக்கு வந்த பெண் குயில்கள்
Image may contain: bird and outdoor
ஆண் குயில்
Image may contain: bird
பெண் குயில்

காக்கை காணொளியில் கடைசியில் பச்சைக் கிளியும் வரும். எங்கு அமர்ந்து இருக்கு என்று பார்த்து சொல்லுங்கள்.

                                                           வாழ்க வளமுடன்.

மதுரைக் கதம்பம்

$
0
0
பரிசாக கிடைத்த கால்மிதி  முன் பக்கம் புள்ளிக் கோலம்
பின் பக்கம் பூக் கோலம். 

சங்கிலி  தையல் மூலம் பூக்கோலம், புள்ளிக்கோலம் போடபட்டு இடுக்கிறது கம்பிளி நூலால் ,  பார்டரில்  குரோசோ பின்னல் பொருட்களை சுற்றி வரும் சாக்குத் துணியை வீண் செய்யாமல் அதை இப்படி கைவேலைப்பாடு செய்து கால்மிதி செய்து இருக்கிறார்கள். எனக்கு அதை கால் மிதியாக போட்டு  வீணாக்க விரும்பாமல் பத்திரமாய் அவர்கள் நினைவாய் வைத்து இருக்கிறேன். சிவகாசியிலிருந்து வந்து இருக்கு இந்த கால்மிதி.
எங்கள் வீட்டு பால்கனியிலிருந்து குழந்தைகள் விளையாடுவதை எடுத்த படம். நான் சொல்லும் விளையாட்டுக்கு யாரெல்லாம் வருகிறீர்கள்? கைதூக்குங்கள் என்று கேட்கும் பையனுக்கு எல்லோரும் நாங்கள் வருகிறோம் என்று கை தூக்குகிறார்கள்.

பள்ளி விடுமுறை முழுவதும்  காலை முதல் இரவு வரை மகிழ்ச்சியாக விளையாடினார்கள். அவர்களின் உற்சாக கூக்குரல் மனதுக்கு உற்சாகத்தை அளித்தது.
                             
 மருத்துவ குணம் தெரிந்த வண்ணத்துப் பூச்சி. ஓமவல்லி (கற்பூரவல்லி)  இலை சாப்பிட்டால் சளிதொல்லை இருக்காது என்பாதால் இலையை சாப்பிடுகிறதோ!! (எங்கள் குடியிருப்பு வளாகத்தில் எடுத்த படம்)
                               

 எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் அய்யனார் கோவில் செல்லும் வழியில் பார்த்த  காட்சி. (செல்லில் எடுத்த படங்கள்)

மாடக்குளம் சோனையார் கோவிலுக்கு திரு ஆபரணப்பெட்டி எடுத்துச் செல்லும் பக்தர் கூட்டம்.
அய்யனார் கோவில்  பக்கத்தில் நின்று ஆடியவர்களுக்கு குளிர்பானங்கள்  கொடுத்தார்கள். அனைவருக்கும் விபூதி வழங்கினார்கள்.
                                              
                                   ஆடி வந்ததைப் பின்புறம் இருந்து எடுத்தேன்.

கீழே வரும் படங்கள் அய்யனார் கோவில் வாசல் உள் எல்லாம் எடுத்தது. முன்பு கிராமக் கோவில் பதிவில்  அய்யனார் கோவில் போட்டு  இருக்கிறேன்.
கோடைக்கு ஏற்ற நுங்கு குளிர்ச்சியாக இருக்கும் ஏற்கனவே ! இன்னும் குளுமைதர ஆலமரம், வேப்பமரம், புளியமரம் சூழ்ந்து பனைமரத்திற்கு நிழல் தருது
                               
                                                  காய்த்துக் குலுங்கும் பனைமரம்.
வில்வ மரத்தில் வில்வக் காய்கள்
வில்வமரத்தில் நிறங்களை மாற்றிக் கொள்ளும் ஒன்று அமர்ந்து இருக்கிறது பார்த்துச் சொல்லுங்கள் அதன் பெயரை (வில்வ இலை, காய் எல்லாம் மருத்துவ குணம் நிறைந்தது)

ஆலமரத்தில் ஆலம்பழம்   நிறைய காய்த்து  பறவைகளுக்கு விருந்து அளிக்கிறது
அழகான ஆலம்பழம்

பறவைகளுக்கு உணவு கிடைக்கிறது ஆலமரத்தில், இந்த சிறுமிக்கு ஆனந்த ஊஞ்சல் கிடைக்குது.

புளியங்காய்
Image may contain: plant, tree, nature and outdoor
புளியம்பூ
தன் குஞ்சுகளுடன் விரையும் கோழி

குப்பையைக் கிளரும் சேவல், கோழிகள்
வேப்பங்காய்- இது பழுத்தால் கிளி கூட்டம் வரும்

வேப்பமர நிழலில் குதிரை மீது அய்யனார்.

முகநூலில் இந்தப் படத்தைப் போட்ட போது பழைய பதிவர் நானானி 
ஐயனாரு நெறஞ்ச வாழ்வைக் கொடுக்கணும் என்று பின்னூட்டம் கொடுத்து இருந்தார்கள். அவர்கள் சொன்னது போல் அனைவருக்கும் அய்யனார் நிறைவான வாழ்க்கையைக் கொடுக்கட்டும்.

'ஐயனாரு நெறஞ்ச வாழ்வைக் கொடுக்கணும்'  என்ற திரை இசைப் பாடல் நினைவுக்கு வருமே சிலருக்கு !

வாழ்க வளமுடன்.

விண்கல் விழுந்த இடம் (வின்ஸ்லோ)

$
0
0
Image may contain: 1 person
விண்கல் விழுந்த இடத்திற்கு வந்து விட்டேன் எல்லோரும் வாங்க என்று கூப்பிடும் பேரன்
Image may contain: 1 person
அவன் குட்டி காமிராவில் அவனுக்குப் பிடித்த காட்சிகளைப்  பதிவு செய்தான்.
Image may contain: 1 person, outdoor
விண்கல் விழுந்த இடத்திற்குப்  போகும் நுழை வாயில் முன்பு என் கணவர்

பார்க்க வருபவர்கள்  எப்படிப் போக வேண்டும், எப்படி வர வேண்டும் என்ற வரைபடத்தை பார்வையிடுகிறார்கள்.

நாமும் இந்த விண்கலத்துக்குள் போய் கிரகங்களை சுற்றி வரலாமா என்று பார்வையிடுகிறான் பேரன்


\பார்வையிட வேண்டிய இடங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை
சுவரில் ஜன்னல் போன்ற அமைப்பிலிருந்து மலைக் காட்சியை ரசிக்கலாம்.
நீலவானமும், காய்ந்த மஞ்சள் புற்களும்  தொடர் மலைகளும் அழகாய் தெரிகிறது  பனிப்படலம் மறைக்கிறது.
No automatic alt text available.

Image may contain: 1 person, standing and outdoor
Image may contain: people standing, sky, mountain, outdoor and nature
பெரிய டெலஸ்கோப் உள்ள மலை சந்திர மலை என்று போட்டு இருக்கிறது.

விண்கல் விழுந்த இடம். (அரிசோனா மாநிலம்)
மகன் அழைத்துச் சென்ற இடம்.
மிகவும் திகைப்பூட்டும் அனுபவம் ஏற்பட்ட இடம்.
Image may contain: sky, mountain, plant, tree, outdoor and nature
தூரத்தில் வெள்ளையாகத் தெரியும் இடம் தான் விண்கல் விழுந்த இடம் டெலஸ்கோப்பில் பார்த்தால் பக்கத்தில் தெரிகிறது. கம்பி வலை போட்டு மூடி வைத்து இருக்கிறார்கள்.
Image may contain: sky, outdoor and nature
இங்கும் நிறைய  சிறிய ரக டெலஸ்கோப் இருக்கிறது பார்வையிட
Image may contain: mountain, sky, outdoor and nature
Image may contain: sky, mountain, cloud, outdoor and nature
இங்கிருந்தும் பார்க்கலாம்.

அன்று காற்று மிகவும் அதிகமாய் வீசியது அதனால் அதிக நேரம் மேலே நிற்க முடியவில்லை, படியில் இறங்க்கும் போது ஆளைத் தள்ளும் குளிர் காற்று. திறந்த வெளியாக இருப்பதால் காற்று எப்போதுமே அதிகம். அன்று மேலும் அதிகம். 


கீழே கடைகளைப் பார்வையிடாமல் வர முடியாது கடைகளைப் பார்த்துக் கொண்டே தான் வெளியே வரும் வழி அமைத்து இருக்கிறார்கள்.




அரிசோனாவில் கிடைக்கும் கனிமங்கள்
மண் அழுத்ததினால் கல்லாக மாறியதில்  செய்த அரிசோனா விலங்குகள், பறவைகள்.
மேல் இருந்து எடுத்த படம்
கீழ் இருந்து எடுத்த படம்
இதை தாண்டி போககூடாது என்றாலும்
தடை செய்யப்பட்ட பகுதியில் விளிம்பில் நின்று நீண்ட குச்சி மூலம் அனைவரையும்  படம் எடுக்கும் கூட்டம்



கலைப்பொருட்களைக் கண்களால் பார்வைமட்டும் செய்தோம் வாங்கவில்லை.
Image may contain: 1 person, standing and shoes
முன்பு பழைய சினிமாவில்  மிகவும் முக்கியமான செய்தியைப் பரபரப்பான  தலைப்பு செய்தியை சொல்லி  ஓடி கொண்டு இருப்பான் சிறுவன்.
அது போல்  'வானம் இடிந்து விழுந்தது 'என்று  சொல்லி செய்தித்தாள் விற்கும் பையன்.

"பெரிஞ்சர்(Barringer) பள்ளம்  "என்பது ஐக்கிய அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தில் உள்ள  ஒரு விண்கல் விழுந்த பள்ளம்.

அது அமைந்து இருக்கும் இடம் 'ஃப்ளாக்ஸ்டாஃப்' (Flagstaff)என்ற இடத்திலிருந்து 69 கி.மீ கிழக்கில் வின்ஸ்லோ அருகில் இருக்கிறது.

மகன் அழைத்து சென்றான் இந்த இடத்திற்கு.

50,000 ஆண்டுகளுக்கு முன் விண்கல் விழுந்த இடம்.
20 மில்லியன் டன் வெடிக்கத் தக்க பொருளுக்குச் சமமான சக்தியுடைய எரிகல்!
விழுந்த இடத்தைப் பாதுகாத்து வைத்து, பார்ப்பதற்குக் கட்டணம் வசூல் செய்கிறார்கள்.
முதியவர்களுக்குச் சலுகை உண்டு, குடியுரிமை உள்ள முதியவர்களுக்கு மேலும் கட்டணச் சலுகை உண்டு.
காற்று அதிவேகத்தில் அடித்தது ,படிகளில் ஏறிச் செல்ல கைப்பிடி இருந்ததால் இறுக்கிப் பிடித்துக் கொண்டு மேலே போய் எரிகல் விழுந்த இடத்தைப் பார்த்தோம்.
கம்பித் தடுப்பைப் பிடித்துக் கொண்டாலும் கீழே தள்ளும் அளவு காற்று.தொலைநோக்கி மூலம் எரிகல் விழுந்த இடத்தைப் பக்கத்தில் பார்க்கலாம்.
ஒளி, ஒலி காட்சிகள் வைத்து இருக்கிறார்கள் .
விண்கல் விழுந்த செய்தியை'வானம் இடிந்து விழுந்தது 'என்று கூறியபடி சிறு பையன் நியூஸ் பேப்பர் விற்கும் காட்சி அழகாய் வைத்து இருந்தார்கள்.

விண்கல் பார்க்கப் போன இடத்தில் கூடு கட்ட காய்ந்த புல் சேகரிக்கும் குருவி.
அலகில் காய்ந்த புல்லை வைத்து இருக்கும் குருவி -இறைவனின் படைப்பு வியக்க வைக்கும்-

இடத்திற்கு ஏற்ற கலர் அந்த குருவிக்கு.
வாழ்க வளமுடன்.

தந்தையர் தின வாழ்த்துக்கள்.

$
0
0
Image may contain: 2 people
என் தந்தையும் நானும்
Image may contain: 1 person
என் தந்தையும் என் அக்கா மகனும்(முதல் பேரன்)
                                                         என் மகனும் என் கணவரும் 

சிறு வயதிலிருந்தே அப்பா போல் சட்டை வேண்டும் என்பான் இருவருக்கு ஒரே மாதிரி துணி எடுத்து தைக்க கொடுப்போம். தீபாவளி பதிவில் இதை எழுதி இருப்பேன்.  இப்போது  டி -சர்ட் தனக்குப் போலவே அப்பாவிற்கு எடுத்து கொடுத்தான்.

என் மகனும் பேரனும்
அப்பாவையும் மகனையும்  நான் எடுத்த படத்தை அவர்களிடம் காட்டும் போது என்னை என் மருமகள் எடுத்து இருக்கிறாள் எனக்குத் தெரியாமல்
போகும் இடங்களில் எல்லாம் தன் குழந்தையை அன்பாய்த் தோள் மீதும் கைகளிலும் சுமந்த தந்தையர்

அன்பாய், கண்டிப்பாய், ஆதரவாய் குழந்தைகளை வளர்த்த அப்பாக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

காலையில் பிள்ளைகள் எல்லாம் வாழ்த்துச் சொன்னார்கள் அப்பாவிற்கு. தங்கை குழந்தைகளும் வாழ்த்துச் சொன்னார்கள். அப்போது எல்லாம் பதிவு போடும் எண்ணம் இல்லை.  

கமலா ஹரிஹரனின்  தந்தை சொல் மிக்க மந்திரமில்லை  என்ற பதிவை படித்தவுடன்   அவர்கள் தோள் மீது குழந்தையை சுமக்கும் அப்பா படம் போட்டதைப் பார்த்தவுடன் சொன்னேன் நானும் இது போன்ற குழந்தையை தோள் மீது சுமப்பவர்கள் படம் எடுத்து இருக்கிறேன் இன்று போடலாம் அதை என்றேன். அதை தேடுவதற்குள் தந்தையர் தினமே முடிந்து விடும் போல!
ஆனால் வெளிநாட்டில் நாளை தானே! என்று என்னைச் சமாதானப்படுத்திக் கொண்டு எப்படியோ தேடி எடுத்துப் பதிவு போட்டு விட்டேன். 

இன்னும் நிறைய எடுத்தேன் அதை அடுத்த ஆண்டு போடுவோம், சரியா?
எங்கள் பேரன் கவினுக்கு இன்று பிறந்த நாள், உங்கள் எல்லோர் வாழ்த்துக் களை வேண்டுகிறேன்.

                                                       வாழ்க வளமுடன்.

பிறந்த நாள் வாழ்த்துக் கவிதை

$
0
0
வணக்கம். நான் வலைத்தளம் வந்து  9 ஆண்டு ஆகி விட்டது.
என் பேரன் பிறந்தும் 9 வருடம் ஆகி விட்டது.

நேற்று அவனது பிறந்த நாளை மகன் வீட்டில் சிறப்பாய்க் கொண்டாடினார்கள்.

தந்தையர் தினம் அன்று தந்தையர்களுக்கு வாழ்த்து சொல்லி விட்டு பேரனின் பிறந்த நாள் இன்று என்று சொல்லி வாழ்த்து கேட்டு இருந்தேன்.
எல்லோரும் வாழ்த்தினார்கள்.

பேரனின் பிறந்த நாள் மேலும் சிறப்பானது.  நம் சகோதரர்  துரைசெல்வராஜூ அவர்கள் பேரனுக்கு எழுதி அனுப்பிய பிறந்த நாள் வாழ்த்துக்  கவிதை. என் கணவர் சொன்னார்கள் ,"சிறு வயதிலேயே வாழ்த்துக் கவிதை வாங்கி விட்டானே!"என்று.

 
Blogger
பேரனுக்கு அன்பின் நல்வாழ்த்துகள்!...

கவின் என்ற சொல் அழகு
கவின் கொண்ட பேர் அழகு...
கவின் என்ற தளிர் வாழ்க
கவின் கொண்டு கவின் வாழ்க!...

பெரியோர்கள் பேர் வண்ணம்
பிழையாமல் பெறும் வண்ணம்
நானிலத்தில் நடை வண்ணம்
நடந்தாலே புகழ் வண்ணம்!...

பேர் கொண்ட சிவ குடும்பம்
சீர் காக்க நீ முனைக...
பேர் தந்த பெற்றோரை
ஊர் போற்ற நீ விழைக!..

கோமதி சிவ சங்கரியாள்
குலங் காத்து நலம் சேர்ப்பாள்..
வான்மதியின் வளர் நிலையாய்
நலங் காத்து புகழ் சேர்ப்பாள்!...

செந்தமிழாள் அருள் புரிவாள்
வளர்ந்திடுக பல்லாண்டு..
சிவ அபிராமி அருகிருப்பாள்
வாழ்ந்திடுக பல்லாண்டு!..

வாழ்க நலம்!..

மகனுக்கு அனுப்பி வைத்தேன் கவிதையை. மகன், மருமகள், பேரன் படித்து விட்டு மிக அருமையாக இருக்கிறது. எங்கள் நன்றியைச் சொல்லுங்கள் என்றார்கள்.

மிகவும் நன்றி சகோ. ஆபீஸ் போய் வந்து எவ்வளவு வேலைகள்  அதை எல்லாம் முடித்து விட்டுத் தூங்கும் நேரத்தை தள்ளிப் போட்டு கவிதையை எழுதி உடனே அனுப்பிய உங்களை நினைத்துப் பெருமையாக இருக்கிறது.
நீங்கள் பன்முகத் திறமையாளர். அன்பான பெரியவர்களின் ஆசியும், அபிராமி அம்மனின் அருளும் கிடைத்தது  எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி, மீண்டும் நன்றி சொல்லிக் கொள்கிறோம். வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறோம்.

பதிவுக்கு பின்னூட்டம் அளித்தவர்கள் எல்லோரும் படித்து இருக்க மாட்டீர்கள் என்பதால் இங்கு பகிர்ந்தேன்.


 Geetha Sambasivam said...
கவினுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். அனைத்துத் தந்தையருக்கும் வாழ்த்துகள். துரை அவர்கள் கவிதை அருமை!
கீதாசாம்பசிவம் மட்டும் படித்து கருத்து சொல்லி இருந்தார்கள்.


//பிறந்த நாள் கொண்டாட்டம் எல்லாம் எப்படி இருந்தது கவின் குட்டிக்கு...//
என்று கேட்டு இருந்தார்கள் அனுராதா பிரேம்குமார். அவருக்காக சில  பிறந்த நாள் விழா கொண்டாட்டப் படங்கள்.

மருமகள் செய்த கேக்- ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருத்து வைத்துக் கொண்டு கேக் செய்வாள். பேரனின் விருப்பப்படி. இந்த முறை எப்போதும் டைடானிக் கப்பல் விளையாட்டு விளையாடியதால் அந்த மாடலில் கேக் செய்து இருக்கிறாள்.
//ஓ இன்று பிறந்தநாளோ?.. குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .. என்றும் நலமோடும் மகிழ்வோடும் வளமாக வாழ வாழ்த்துகிறேன்.. இது எத்தனையாவது 9 வயசோ? இல்ல 8?..////

அதிராவின் கணிப்பு எப்போதும் சரியாக இருக்கும் என்பதற்குச் சான்று.

இந்த முறை பிறந்த நாள் விழாவிற்கு வந்த புது வரவு -மித்திரன்.
மகனின் நண்பரின் இரண்டாவது குழந்தை.
இந்த முறை இதுவும் புதிது.  விழா என்றால் நம் ஊரில் பஞ்சு மிட்டாய் இடம் பெறும்.  அதனால் இந்த முறை அந்த பஞ்சு மிட்டாய் மிஷின் வாங்கி குழந்தைகளுக்கு செய்து கொடுத்தவுடன் எல்லோருக்கும் மிகுந்த மகிழ்ச்சி
நண்பர் செய்து கொடுக்கிறார். முதலில் சின்னதாகச் செய்து கொடுத்து அது அவர்களுக்கு பிடித்ததால் பெரிதாக செய்து கொடுத்தராம். சிவாவின் யோசனையைப் பாராட்ட வேண்டும்.

இந்த ஆண்டு பேரனின் சில நட்புகள் இந்தியா வந்து விட்டார்கள் விடுமுறைக்கு.  பேரனுக்கு  மகிழ்ச்சி அளிக்க இன்னொரு ஆச்சி (மருமகளின் அம்மா)   வந்து இருக்கிறார்கள். மருமகளும், அவள் அம்மாவும்  , என் மகன், அவன் நட்புகள் சேர்ந்து  பேரனின் பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடி விட்டார்கள். நாங்களும் வாட்ஸப் மூலம் நேரில் கலந்து கொண்ட அனுபவம் பெற்றோம்.  


Monday, June 1, 2009

மார்கழியில் மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து 
இயற்கை தரிசனம்
எண்ணமே இயற்கையதன் சிகரமாகும்
இயற்கையே எண்ணத்தில் அடங்கிப்போகும் . - வேதாத்திரி மகரிஷி

நான் முதலில் போட்ட பதிவு.

                                                          வாழ்க வளமுடன்.

சொல்லுங்கள் பார்ப்போம்

$
0
0
Image may contain: indoor



No automatic alt text available.

இது என்ன பெட்டி என்று தெரிந்தவர் சொல்லுங்கள்.
விடை நாளை

மந்திரப் பெட்டியா?
தந்திரப் பெட்டியா?
வாழ்க்கைக்குத் தேவையான பெட்டி முன்பு.

வாழ்க வளமுடன்.

சொல்லுங்கள் பார்ப்போம்- பதிவு இரண்டு

$
0
0

நேற்று சொல்லுங்கள் பார்ப்போம் என்று  ஒரு பதிவு போட்டுக் கேட்டு இருந்தேன் ஒரு கேள்வி . இன்று சொல்வதாய்ச் சொல்லி இருந்தேன். அதன் விடை  - அஞ்சறைப் பெட்டி.

வாழ்க்கைக்குத் தேவையான பெட்டி முன்பு  என்றேன்  ஏன் என்றால் இப்போது யாரும் இந்தப் பெட்டியில் வைத்துக் கொள்வது இல்லையே! அதுதான்.

Image may contain: indoor
இது என்ன பெட்டி என்று தெரிந்தவர் சொல்லுங்கள்.
விடை நாளை  என்று சொல்லி யிருந்தேன்
No automatic alt text available.


அஞ்சறைப் பெட்டிதான் விடை
ஐந்து அறைகள் இருக்கிறது 
என் மாமியார் வீட்டு அஞ்சறைப் பெட்டி இது.   அஞ்சு பிரிவு உள்ளதற்கு மூடி உண்டு. 

ஆரம்ப காலத்தில் அதில் மிளகு , சீரகம், மல்லி, கடுகு, உளுத்தம்பருப்பு இருந்தது . அந்த பக்கத்தில் மூன்று பெட்டிகள் உண்டு. 10 கிலோ வரை சாமான்கள் கொட்டி வைத்துக்கொள்ளலாம். அதில் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய்   போன்றவைகள் இருக்கும்.

அந்தப் பெட்டிகளை வேறு உபயோகப் பொருட்களாக மாற்றி விட்டார்கள்.

அந்தக் காலத்தில் புதிதாக திருமணம் ஆகிப் போகும் பெண்வீட்டில் "அஞ்சும் மூன்றும் அடுக்கா இருந்தால் அறியாப்பெண்ணும் சமைப்பாள்"என்பார்கள்.

இந்த அஞ்சறைப் பெட்டியைத்தான் சொல்லி இருக்கிறார்கள். 

 அவள் உக்கிராண அறைக்குப் போய்விட்டால் அஞ்சறைப் பெட்டியில் சமைக்கும் பொருட்கள்  மற்றும் சமையல் சாமான்கள், எண்ணெய் ஜாடிகள் , ஊறுகாய் வகைகள் நெய், என்று எல்லாம் ஒரே இடத்தில் இருக்கும். அவள் கணவன் வீட்டாரிடம் அது எங்கே, இது எங்கே என்று கேட்க வேண்டாம் என்று அப்படிச் சொல்லி இருக்கிறார்கள்.

முன்பு தொலைக்காட்சியில் விளம்பரம் வரும்- அழகான நகைப்பெட்டி போல் பாட்டி பேத்திக்குச் சீர் கொடுப்பார்கள், அதைப் பேத்தி திறந்து பார்ப்பாள் அதில் பல அறைகள்- அதில்  பொடி வகைகள் இருக்கும். ஏதோ சாம்பார்ப் பொடி விளம்பரம். முதலில் கணவர், கணவர் குடும்பத்தினரிடம் நல்ல பேர் வாங்க வேண்டும் என்று சொல்வார்கள் பாட்டி. விளம்பரம் பார்த்தவர்கள் சொல்லுங்கள் பாட்டியா, அம்மாவா கொடுப்பார்கள் என்று மறந்து விட்டது. பல வருடங்களுக்கு முன் வந்த விளம்பரம்.
                                    
                          என் கணவர்  வரைந்து தந்த கணினி ஓவியம்.
 பழங்காலத்து ஆச்சி படம். என் அம்மாவின் அம்மா காது வளர்த்து பாம்படம் போட்டு இருப்பார்கள். என் அப்பா ஆச்சி  காது வளர்க்கவில்லை.

இந்த அஞ்சறைப் பெட்டி பல தலைமுறை தாண்டி அத்தையிடம் வந்து இருக்கிறது. மூன்று பெரிய பெட்டிகளை அத்தை வெளியில் எடுத்து வைத்து விட்டு அதில் பழைய பாத்திரங்கள்  வைத்து இருந்தார்கள் ஒரு காலத்தில், அப்புறம் பழைய போட்டோக்கள் இருந்தன.  அதன் மேல்  துணியைப் போட்டு மூடி. பெட்டி என்பது தெரியாமல்  செய்து அதில் தொலைக்காட்சிப் பெட்டி வைத்து இருந்தார்கள் அத்தை.

அத்தையின் இறப்புக்குப் பின் அடுக்களை மூலைக்கு வந்து இருக்கிறது. அதை இந்தக் காலத்துப் பேரன் பேத்திகளுக்குத் திறந்து காட்டப்பட்டது. ஒரு பேத்தி மட்டும்  என் கணவரின் அண்ணன் மருமகள் ஆசைப்பட்டு,"நான் எடுத்துக் கொள்கிறேன்"என்றாள்.  "அதை என்ன செய்வாய்?"என்று எல்லோரும் கேலி செய்துகொண்டு இருந்தார்கள்.

 முன்பு கூட்டுக் குடும்பமாய் இருந்த பெரிய குடும்பங்களில்   அஞ்சறைப் பெட்டி இருக்கும். என் தாத்தா வீட்டிலும் இதைவிடப் பெரிய  அஞ்சறைப் பெட்டி உண்டு.  அப்போது உள்ளவர்கள் வீட்டில் குழந்தைகள் 10 பேர் 12 பேர் என்று இருப்பார்கள். ஆட்கள் அதிகம் சாமான்கள் சேகரிப்பும் அதிகம். "அறைவீடு"என்று இருக்கும், அதை உக்கிராண அறை . ஸ்டோர் ரூம் என்பார்கள்.  அதில் உணவுப் பொருட்கள் இருக்கும் . சிலர் வீட்டில் அதற்கு பூட்டுப் போட்டுப் பூட்டி இருப்பார்கள். தவசிப்பிள்ளை சமைக்க வந்தால் எடுத்துக் கொடுப்பார்கள் அப்புறம் மூடிப் பூட்டி வைத்துக் கொள்வார்கள். பாளையம்கோட்டையில் என் அப்பாவின் வீட்டில் அப்படி இருந்தது.  சித்தப்பா, பெரியப்பா, அத்தைகள் என்று பெரிய கூட்டம் இருக்கும், தாத்தா வீட்டில். ஆச்சி சமைத்துப் பார்த்ததே இல்லை நான். எல்லோரும் வளர்ந்து அரசாங்க உத்தியோகம். யாரும் ஆச்சியுடன் (பாட்டியுடன் )இல்லை, தனித் தனியாக வேறு வேறு ஊரில்.  அத்தைகளும் திருமணம் ஆகிப் போனவுடன் அஞ்சறைப் பெட்டி எல்லாம் பயனில்லாமல் போய் விட்டது.

காலம் மாற மாற சின்னச்சின்னதாய் அஞ்சறைப்பெட்டிகள், பித்தளை, அனுமினியம், எவர்சில்வர்,  வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மசாலா ஜாடிகள் என்று கண்ணாடிபாட்டில்கள். வந்து விட்டது.   ஆனால் அந்த கால அஞ்சறைப் பெட்டி என்றால் ஐந்து  அல்லது ஏழு  இருக்கும். கண்ணாடி ஜாடியில் நிறைய இருக்கிறது. மசாலாச் சாமான்களும் இடம் பிடிக்கிறது.

மருமகள் வாங்கித் தந்ததும், அம்மா வாங்கித் தந்ததும்
இவைகள் எல்லாம் இருந்தாலும் எனக்கு எடுக்க வசதி என்று சின்ன பாட்டில்களில் வைத்து இருக்கிறேன் கடுகு, மிளகு , சீரகத்தை.
என் அடுக்களைக்கு யார் வந்தாலும் சமைக்கக் கஷ்டப்படவேண்டாம் பொருட்களைத் தேடி. 

 முன்பு அம்மா கொடுத்த அஞ்சறை டப்பாவில் பொருட்களை வைத்து விட்டு அவசரத்தில்  எடுக்கும் போது கொட்டி ஒன்றோடு ஒன்று கலந்த பொருட்களை சாம்பார் பொடி அரைக்கும் போது பயன்படுத்திய அனுபவம் உண்டு.

என் கணவர், திருமணத்திற்கு முன் திருவெண்காட்டில் இருந்தபோது  நல்ல ஓட்டல்கள் கிடையாது  என்பதால் அவர்களே  சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள் , அப்போது  அலுமினியத்தில் அஞ்சறை டப்பா வைத்து இருந்தார்கள். எனக்கு அம்மா எவர்சில்வர் டப்பா வாங்கித் தந்தார்கள்.  நான் கணவர் வைத்து இருந்த அலுமினிய டப்பாவை கலர் கோலப்பொடி போட்டு வைத்துக் கொண்டேன், மார்கழி மாதம் கோலம் போட. அதுபோக  இன்னொரு  பிளாஸ்டிக் அஞ்சறைப் பெட்டி ஒன்றும் மாயவரம் ஐப்பசி முழுக்குக் கடையில் வாங்கினேன். இரண்டு டப்பாக்களிலும் கலர்ப் பொடி கலந்து வைத்துக் கொண்டு  கோலம் போடுவேன்.

பலசரக்குச் சாமான்கள் வருடத்திற்கு வாங்குவது குறைந்தபின் பெட்டிக்கு  அதன் உபயோகம் இல்லாமல் போய்விட்டது. அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்துகொண்டு அரிசிக் கடையில் வாங்கி சாப்பிட ஆரம்பித்தவுடன் நெற்குதிர் இல்லை வீடுகளில். வயல் வைத்து இருப்பவர்களின் வீடுகளிலும், கோவில்களிலும் மட்டும் தான் பத்தாயம் இருக்கிறது இப்போது. கோவிலில் கூட இப்போது மூட்டை மூட்டையாக அப்படியே வைத்து இருக்கிறார்கள். யார் பத்தாயத்தில் கொட்டி பின் எடுத்து, அதைச் சுத்தம் செயவது பெரிய வேலை .

தூத்துக்குடியில் நான் சிறுவயதில் இருந்தபோது பக்கத்து வீட்டில் ஒரு அறையே நெற்குதிராக  வைத்து இருந்தார்கள். அதில் பக்கத்தில் சின்ன ஏணி இருக்கும் அதன் வழியாக உள்ளே இறங்கலாம்.  மொட்டைமாடியில் நெல்காயவைத்தால் அதைத் தூக்கி வர வேண்டாம் கீழே,

மேலிருந்து அப்படியே நெற் குதிருக்குள் தள்ளி விடலாம், மூடி போட்டுப் பூட்டி  வைத்து இருப்பார்கள். அப்புறம் திருடர் பயம் வந்து அதை மூடி விட்டார்கள்.



படித்ததில் பிடித்தது.


மிளகாய், தனியா, சீரகம்....என்று ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத பொருட்கள் அஞ்சறைப் பெட்டியில் இருந்தாலும், அவை எல்லாம் சேரும் பொழுது குழம்போ, ரசமோ கிடைப்பது போல், என் மனதிலும்( எல்லோர்) மனதிலும் ஒன்றொடொன்று சம்பந்தமில்லாத ஆயிரம் எண்ணங்கள் தோன்றி மறைந்து, மனதை பல  நேரங்களில் குழம்பு போல் கலக்குகிறது.  சில் நேரங்களில் ரசம் போல் தெளிவாக இருக்கிறது.  அவ்வாறு தோன்றிய சம்பந்தமில்லா எண்ணங்களின் தொகுப்பு இது.




அஞ்சறைப்பெட்டி வைத்தியம் - மிளகு, சீரகம்,மல்லி வைத்து நம் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு வைத்தியம் பார்த்துக் கொள்வதை அஞ்சறைப் பெட்டி வைத்தியம் என்கிறார்கள்.
பாட்டி வைத்தியத்திலும் இந்த அஞ்சறைப் பெட்டி உதவும்.

தொலைக்காட்சியில் சமையல் குறிப்புகள் கொடுக்கும் ஒரு நிகழ்ச்சியை "அஞ்சறைப் பெட்டி"என்கிறார்கள்.
                                          

பித்தளையால் நான்கு மூலைகளும்  அழகு படுத்தப்பட்ட பணப்பெட்டி.  அந்தக் காலத்தில் செட்டிநாட்டில் வேலைபார்த்தார்களாம் மாமனார் அப்போது வாங்கிய பணப்பெட்டி.

                                              
உள்ளே இப்படி இருக்கும். பணம், சில்லரைக் காசு, பத்திரங்கள் வைத்துக் கொள்ளலாம். ரகசிய அறை எல்லாம் அதிகப்படி என்று எளிமையான பணப்பெட்டி வாங்கினார்களாம். அப்புறம் கோத்ரேஜ் பீரோ வாங்கிய பின் பூஜை அறையில் தஞ்சம் அடைந்து விட்டது இந்தப் பெட்டி.


தேவகோட்டை ஜி, சகோ துரைசெல்வராஜூ எல்லாம்   போன பதிவில் பணம்வைத்துக் கொள்ளும் பெட்டி என்றார்கள். அதனால் மாமா வைத்து இருந்த பணப்பெட்டியும் இடம் பிடித்து விட்டது பதிவில்.

KILLERGEE Devakottai said...
//இது முன்பு எல்லோரது வீட்டிலும் குறிப்பாக செல்வந்தர் வீடுகளில் இருக்கும் பணப்பெட்டி. இதனுள் வீட்டுப் பத்திரங்கள் மற்றும் முக்கிய கடிதங்கள் வைத்து இருப்பார்கள்.

இதனுள் ரகசிய அறைகளும் உண்டு இதைத் திறப்பது சிறுவர்கள் அறியாதவாறு இருக்கும். அதை டெக்னிக்கலாக தட்டினால் திறந்து விடும்.//

//துரை செல்வராஜூ said...
இந்த அளவுக்குப் பெரிதாக இல்லாவிட்டாலும் 
சிறியதாக ஒரு சாதிக்காய் பெட்டி இருந்தது..

அதனுள் தான் எங்கள் அப்பாயி அரிசி விற்ற பணத்தை வைத்திருப்பார்கள்..
பெட்டியின் உள்ளே சிறு சிறு தடுப்பறைகள் இருக்கும்...//

இந்த இரண்டு பெட்டிகளும் நமக்குத் தேவையான ஒன்று தான் வாழ்க்கைக்கு. இரண்டுமே அளவு மீறாமல் இருந்தால் எல்லாம் நலமே.
இருப்பதைக் கொண்டு சிறப்பாய்ச் சமைக்கும் பெண்,  இருப்பதைக் கொண்டு நிறைவாய் வாழும் மனம் இரண்டும் இருந்தால் போதும்தானே!
                                                             வாழ்க வளமுடன்.
                                                                  ----------------------

ஜன்னல் வழியே

$
0
0
எங்கள் குடியிருப்பு வளாகத்திற்கு வந்த புதுவரவு.

ஏற்கனவே  எங்கள் வளாகத்தில் இருக்கும்  சிட்டுக் குருவி மிக வேகமாய் சத்தம் கொடுத்தது. என்ன என்று எட்டிப் பார்த்தால் புதுவகையான சிட்டுக்குருவிகள் எதிர்வீட்டுப் பால்கனியில் உட்கார்ந்து இருந்தது, அழகாய் இருந்தது,  அதைப்பார்த்து இந்த சிட்டுக்குருவி சத்தம் கொடுத்தது.

புதுவரவுக் குருவிகளின் பெயர் என்ன என்று பார்ப்போம் என்று கூகுளில்  பார்த்தால்  நம் ராமலக்ஷ்மி அதைப் பற்றி எழுதிய தினமலர் கட்டுரை கிடைத்தது. அதைக் கீழே கொடுத்து இருக்கிறேன்.
Image may contain: one or more people

Image may contain: bird

Image may contain: bird

No automatic alt text available.

Image may contain: bird


பனை, தென்னை மரங்களில் காய்ந்து தொங்கும் சல்லடை போன்ற நார்களை  வைத்துக் கூடு கட்டுமாம் அதனால் கட்டிலில் உள்ள பிளாஸ்டிக் நாரை எடுத்துக் செல்கிறது. அலகால் கொத்தி இழுக்கும் அழகே அழகு.
நான் அவசரமாய் எடுத்தேன், அது ஒரு இடத்தில் இருக்க மாட்டேன் என்கிறது, பறந்து கொண்டு இருந்தது. அதனால் ஓரளவுதான் எடுத்து இருக்கிறேன்.

புள்ளிச் சில்லை
ஆங்கிலப் பெயர்: 'ஸ்பாட்டட் முனியா' (Spotted Munia)
வேறு பெயர்கள்: சில்லை, திணைக்குருவி, ராட்டினக் குருவி
உயிரியல் பெயர்: 'லோன்சுரா பங்க்சுலடா' (Lonchura Punctulata)
திணைக்குருவி வகையைச் சார்ந்த, சிட்டுக்குருவி அளவிலான சிறு பறவை. 'எஸ்ட்ரில்டிடா' (Estrildidae) குடும்பத்தைச் சேர்ந்தது. ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. உடலின் மேற்புறம் பழுப்பு நிறத்தில் இருக்கும். மார்பு, வயிற்றுப்புறம் செதில் போன்ற புள்ளிகளுடன் காணப்படும். அலகு பெரிதாக, கூம்பு வடிவத்தில் இருக்கும். சில்வண்டு போன்று சத்தம் எழுப்பும். கூட்டமாக வாழும். சிறு புற்கள், பூச்சிகள், பழங்கள் போன்றவற்றை உண்ணும். புற்களின் சிறு கிழங்குகளையும் கொத்தி உண்ணும். இதன் அலகு திணை உண்ண ஏற்ற வகையில் அமைந்திருக்கிறது. இதனால் திணைக்குருவி என்றும் குறிப்பிடப்படுகிறது.
தோற்றத்தில் ஒரே மாதிரி தெரிந்தாலும், ஆண் பறவைகளுக்கு புள்ளிகள் அழுத்தமான வண்ணத்திலும், தொண்டைப் பாகம் ஆழ்ந்த பழுப்பிலுமாக இருக்கும். பனை, தென்னை மரங்களில் காய்ந்து தொங்கும் சல்லடை போன்ற நார்கள் சில்லாட்டை என்பர். மென்மையான இந்த சில்லாட்டைகளைக் கொண்டு கூடுகளைத் தயார் செய்வதால், இவற்றுக்குச் சில்லைகள் என்றும் பெயர் உண்டு. புற்கள், வாழைநார்கள், இலைகள், பறவைகளின் இறகுகள் போன்றவற்றைக்கொண்டும் கூடு கட்டும். கூடு அமைக்கும் பொழுது, மிகவும் சுறுசுறுப்பாக ராட்டினம் போல் சுற்றிச் சுற்றி வரும். இருபாலினங்களும் இணைந்தே கூடு கட்டும். ஆறு முட்டைகள் வரை இடும்.
முட்டைகளை ஆண், பெண் பறவைகள் அடை காக்கும். பதினைந்து நாட்களில் குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளியில் வரும். குஞ்சுகள் வெளிவரும் பருவ காலத்தைப் பொறுத்து 7 முதல் 18 மாதங்களில் வளர்ந்து இனப்பெருக்கத்துக்குத் தயாராகும். இவை பல வண்ணங்களில் உள்ளன. தமிழகத்தில் பெரும்பாலும் காணப்படுகிறது. அழகிய தோற்றத்தால், இவை செல்லப் பறவைகளாகவும் வளர்க்கப்படுகின்றன.
வகைகள்
* சிவப்புச் சில்லை (Red Munia - ரெட் முனியா)
* வெண் தொண்டை சில்லை (White Throated Munia - ஒயிட் த்ரோட்டட் முனியா)
* கருந்தொண்டை சில்லை (Scaly Breasted Munia - ஸ்காலி பிரெஸ்ட்டட் முனியா)
* மூவண்ண சில்லை (Tricoloured Munia - டிரைகலர்டு முனியா)

நீளம்: 12 செ.மீ.
எடை: 16 கிராம்
ஆயுள்: 8 ஆண்டுகள்

-ராமலக்ஷ்மி

நன்றி ராமலக்ஷ்மி.


                                                                                            வாழ்க வளமுடன்.



சில நினைவுகள்.

$
0
0
 Grand Canyon போகும் முன்   Holbrook என்னும் இடத்தில் உள்ள  தங்கும்  விடுதியில் தங்கினோம். கல்லாகிப் போன மரங்கள் உள்ள தேசிய பூங்கா இந்த ஊருக்குப் பக்கம் இருக்கிறது, அமெரிக்கப் பூர்வீகக் குடிமக்கள்  இருந்த இடங்கள், அவர்கள் இருந்த வீட்டின் அமைப்பு, அவர்களுடைய கைவினைப் பொருட்கள் ஆகியவற்றைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள்  இங்கு தங்கிப் போவார்கள். நாங்களும் இங்கு தங்கி, இந்த இடத்தை ரசித்துப் பார்த்துப் பின் தேசிய பூங்காவிற்குப் போனோம். 

இந்தப் பதிவில் தங்கும் விடுதி மட்டும். 

சகல வசதியும் கொண்ட தங்கும் விடுதி
Image may contain: house, night and outdoor
வீட்டின் முன் பகுதி
கண்ணாடியில் அவனும் நானும் தெரிகிறோம்
Image may contain: indoor
மேலும் கீழுமாய் ஒடி விளையாடினான் பேரன்.

மாடியிலிருக்கும் பேரனைக் கீழ் இருந்து பார்க்கும் தாத்தா

தாத்தாவின் ரூம்  வசதியாக இருக்கிறதா என்று செக் செய்கிறான்



Image may contain: night, sky, house, tree and outdoor
 எங்கள் வீடும் அன்று இரவு  வந்த   நிலாவும்


வீட்டில் எல்லா வசதிகளும் இருக்கிறது
                                          படியில்    தாத்தாவும் பேரனும் விளையாட்டு!

அந்தக்காலத்தில் திருநெல்வேலியில் மச்சுக்கு போக சில வீடுகளில் இப்படிதான் மரப்படி இருக்கும், மேல் படி கிட்ட  கதவு இருக்கும் அதைத் தூக்கி விட்டு மச்சுக்குப் போக வேண்டும். 


மாடிப்படிக்கு அடியில் உள்ள இடத்தில் இரண்டு படுக்கும் இடங்கள்
Image may contain: 1 person, smiling, sitting and indoor
நல்லா இருக்குதா ஆச்சி வீடு?
சிறிது நேரம் அவன் கொண்டு வந்து இருந்த விளையாட்டுச் சாமான்களை வைத்து விளையாடினான்.

நிறைய பேர் இருந்தால்   இந்தப் படுக்கைகளும் உபயோகம் ஆகி இருக்கும் நாங்கள் ஐந்து பேர்கள் தான்.

குளியல் அறையும், கழிவறையும்  சகல வசதியுடன்.

குளியல் அறை 

மாடி அறையில் இரண்டு படுக்கை வசதி இருக்கிறது. ஆனால் பெரியவர்கள் அடிமைப்பெண்   படத்தில் எம் .ஜி யார் நடப்பது போல் குனிந்து நடந்து போக வேண்டும்.



சிறிது நேரம் யூடியுப்பிலிருந்து படம் பார்த்தல்,
 கொடுத்து இருக்கும் வைஃபை வசதியை அனுபவித்தல்
எல்லோரும் படுத்தபின் அன்று எடுத்த படங்களை காமிராவிலிருந்து மடிக் கணினிக்கு மாற்றி விட்டுத்தான் எனக்குத் தூக்கம். 
மறுநாள் போகும் இடங்களில் போட்டோ எடுக்கவேண்டுமே!
ஒரு படுக்கை அறை வசதி உள்ள வீடுகள். 
முன்புறம் ஊஞ்சல் , சாப்பாட்டு மேஜை எல்லாம் உள்ளது. 

200 ஆண்டுகள் முந்திய மரம் கல்லாக
விளையாட நிறைய இருந்தது பேரனுக்கு




எவ்வளவு விளையாடினாலும் அப்பாவின் முதுகில் சவாரி செய்யும் விளையாட்டுக்கு ஈடு ஏது?
என்னுடன் பறவையைப் பார்த்தான்  
மொட்டை மரத்தின் உச்சாணிக் கிளையில் இருந்த குருவி

மண்ணில் வீடு கட்டிக் கொண்டு இருக்கும் எறும்பை ஆராய்ச்சி செய்தான்.

நிறைய பேர் சகல வசதியும் உள்ள காரவேனில் வந்து இருந்தார்கள். அவர்களுக்குத் தண்ணீர் வசதி, சமைக்க மின்சார வசதி  எல்லாம் செய்து கொடுக்கிறது விடுதி.

கைவினைப் பொருட்கள் விற்கும் கடையும் உண்டு. வெளியில் தொங்கும்  பறக்கும் பலூன் வாங்கினோம்.

காரவேனில் வந்து இருக்கும்  அன்பர்களின் வளர்ப்புச் செல்லங்கள்.  அவர்களைத் தடுப்புக் கூண்டுக்குள் விட்டு விட்டுத் தங்கள் 
வேலைகளைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.


மறுநாள் காலை கிளம்பி விட்டோம்.

குழந்தைகள் தாங்கள் அனுபவித்த  அனுபவங்களைத் தன் பெற்றோர்களும் அனுபவிக்க வேண்டும் என்று அழைத்துச் சென்று காட்டினார்கள்.  இடங்களை நாங்களும் ரசித்து பார்த்தோம். அதில் அவர்களுக்கு மகிழ்ச்சி.

சமையல் செய்து எடுத்துக் கொண்டோம்.
சின்ன வெங்காய  புளிக் குழம்பு கொதிக்கிறது அடுப்பில்.
(சின்ன வெங்காயம் எப்பொழுதும் கிடைக்காது. கிடைக்கும்போது வாங்கிக் கொள்ள வேண்டும்)
பருப்பு, சாதம் குக்கரில் ரெடி.

சேப்பங்கிழங்கு பொரியல் (காரக்கறி) உருளைக்கிழங்கு, சிப்ஸ், தயிர் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டோம். மதியத்திற்கு.

காலை உணவு  தங்கும் விடுதியில்  கொடுப்பார்கள். சாப்பிட்டு விட்டு சாமான்களை எடுத்துக்கொண்டு அடுத்து பயணம் ஆரம்பிக்க வேண்டும்.


                             
                                                          வாழ்க வளமுடன்.

தென்பரங்குன்றம்

$
0
0
"பசுமை நடை"இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம்.
திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது.

 நேற்று(15.07.2018) காலை ஆறு மணிக்குத் திருப்பரங்குன்றம் பஸ் நிலையத்திற்கு வரச் சொன்னார்கள். குறிப்பிட்ட நேரத்தில் அங்கு போனோம். பசுமைநடை இயக்கத்தைச் சேர்ந்த ஒரு அன்பர் எங்களைப் பேருந்து நிலையத்திற்கு வெளியே ஒரு கடை முன் காத்து இருக்கச் சொன்னார்.  7 மணிக்கு அங்கிருந்து அனைவரும் தென்பரங்குன்றம் பயணித்தோம்.  10 நிமிடத்தில் மலையடிவாரம் வந்தது.  வாகனங்களை நிறுத்தி விட்டுச்  சிறிது தூரம் நடந்தால் குடைவரைக் கோயில். 
கி.பி 8-9 ஆம் நூற்றாண்டில்  இக்கோயில் எடுக்கப்பட்டு இருக்கலாம்.

படிக்க முடிகிறது அல்லவா?
படித்து விட்டு வாருங்கள்,  குடைவரைக் கோயிலுக்குப்  போய்ப் பார்க்கலாம்.
போகும் பாதையில் பசுமை நடை இயக்கத்தைச் சேர்ந்தவர் நிறைய மரம் புதிதாக நட்டு இருக்கிறார். அரசமரம், ஆலமரம், வேப்ப மரம், பூவரசு போன்ற மரங்கள் வழி நெடுகிலும் நடப்பட்டுள்ளன. அடுத்துப் போகும்போது   அவை வளர்ந்து நிழல் தரும் . 
கொஞ்சம் படிகள் இருக்கிறது

விழுதுகளாய்ப் பரப்பிக் கொண்டு படிக்கட்டுகளின் இருபுறமும்  ஆலமரம் அழகாய்க் காட்சி தருகிறது. 

90 பேர் வந்து இருப்பார்கள்.
ஆலமர விழுதுகள் நிறைய ஒன்றாகச் சேர்ந்து  நல்ல  தடிமனாக இருக்கிறது. வெட்டி விட்டதால் அப்படி இருக்கிறது,  ஒரு கிளையை வெட்டிய பகுதி  நாய் தன் முகத்தைத் தூக்கிப் பார்ப்பது போல் இருக்கிறது அல்லவா?
படிக்குப் பக்கத்தில் நிறைய வேப்பமரம் வளர்ந்து கொண்டு இருக்கிறது பார்க்க அழகு, பச்சை பசேல் என்று.

படியேற சிரமம் இல்லை.  ஒரு வாரமாய்க் கொஞ்சம் கால்வலி(கணுக்கால் வலி) இருந்ததால்  ஏறமுடியுமா என்று சந்தேகம். அங்கு போய்ப் பார்த்தபோது ஏறலாம் கால்வலிக்காது என்ற நம்பிக்கையோடு ஏறினேன் அங்கு  எல்லோரையும் பார்த்த மகிழ்ச்சி , புதிய இடம் பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சி. கால்வலி தெரியவில்லை,  வீட்டுக்கு வந்தவுடன் வலி தெரிந்தது வெந்நீருக்குள் கால்களை வைத்து அதற்கு நன்றி சொல்லியாச்சு. இன்னும் இரண்டு மூன்று நாள் அதற்குச் சேவை செய்ய வேண்டும். வலி இருக்கிறது.             
                              படியேறி மேலே போனதும்  கோயில்  வாசல்
வாசலின் வலது  பக்கம் தேவாரம் பாடிய மூவரின் சிற்பங்களும்,
 பைரவர் நாய்வாகனத்துடன் செதுக்கப்பட்ட சிற்பமும் உள்ளன.

நடுவில் இருக்கும் திருஞானசம்பந்தர், ஆடும் கோலத்தில் இருப்பார். அதற்கு  சாந்தலிங்க ஐயா சொன்ன விளக்கம் நன்றாக  இருந்தது.  திருஞானசம்பந்தர்  சின்னப்பிள்ளை என்றும்,  நம் வீட்டில் இருக்கும் சின்னப்பிள்ளையை
கடைக்குப் போய்வா என்றால் என்ன செய்யும் ஆடிக் கொண்டே ஓடிக் கொண்டே தான் போகும் . அது போல் அவர் ஆடிக் கொண்டு இருக்கிறார். அவரை அது போல் வடித்து இருக்கிறார்கள். என்றார். என் கணவர் அதை மிகவும் ரசித்தார்கள், அவர்களது அம்மா கடைக்கு போய் ரவை வாங்கி வா என்றால்  ஆடிக் கொண்டு ஓடிப் போய் வாங்கி வந்து விடுவார்களாம், அவர்கள் அம்மா என்னடா இவ்வளவு சீக்கீரம் வந்து விட்டாய் என்பார்களாம். 

மேலே கடைசியில் உள்ள பைரவர் தெரியவில்லை என்பதால் மீண்டும் தனியாக அவரது படம். கைகள் தான் பின்னப்படுத்தி இருக்கிறது எல்லாச் சிலைகளிலும் 
கோவில் வாசல் வலது பக்கத்தில் பிள்ளையார்.  இரண்டு துறவியர் சிற்பங்கள்.

கோயிலுக்குள் நடுவில் நடராஜர் பக்கத்தில் உமை இருந்தார்கள். இருட்டில் எடுத்ததில் விடுபட்டு இருக்கிறது. இரண்டு கைகளும் இல்லாமல் இருந்தது. நடராஜர் பாதமும் முயலகன் மேல் இருக்கும் காலும் இல்லை. இன்னும் இரண்டு கைகளும் இல்லை , இரண்டு கைகள் மட்டுமே இருக்கிறது. உடுக்கை ஏந்திய கையும் கொஞ்சம் உடைந்து இருக்கிறது.

நடராஜர் கால் அருகில்  நான்கு கரங்களுடன் தெரியும்  உருவத்தைப்பார்த்தால் நரசிம்மர் போல் இருக்கிரார்.
மேல் பகுதியில் ஒரு புறம் பெரிய விநாயகர்  - அவரைச்  சுற்றிச் சின்னச் சின்ன விநாயகர்கள்
 மற்றொரு புறம் மரத்தின் மீது அழகாய் மயில் வாகனத்தில் முருகன் இருக்கிறார்.

வள்ளி, முருகன், தேவசேனா

குடவரைக் கோயில் பற்றிய அறிவிப்புப் பலகை

கல்வெட்டுக்கள்.
இரு கல்வெட்டுக்கள் உள்ளே இருக்கின்றன
முன் அறை : தரையில் நிறைய விளையாட்டுக்குரிய வரைகோடுகள்   வரையப் பட்டு இருக்கின்றன.
"ஆடு -புலி"ஆட்டம்
மெலிந்த யானையின் ஓவியம்
இது என்ன விளையாட்டு என்று தெரியவில்லை
"தாயக்கட்டம்"போல் இருக்கிறது

படி ஏறி வரும்போது பக்கத்தில் உள்ள திண்ணையில்  பாதங்களும் எழுத்துக்களும் காணப்படுகின்றன.
கோயிலில் மேல் பகுதிச்   சிற்பங்கள் எல்லாம் சிதைந்து இருக்கின்றன.
"பசுமை நடை"யின்  தலைவர்  திரு. முத்துகிருஷ்ணன் அவர்கள்  பேசுகிறார். அவருக்கும் இந்த இடத்திற்கும்  30 வருட பந்தம் உள்ளது  என்றார். இதை சுற்றுலா ஸ்தலமாக என்ன முயற்சி செய்யமுடியுமோ அதைச் செய்ததாகவும், செய்து கொண்டு இருப்பதாகவும்  கூறினார்.

தொல்லியல் துறை    அறிஞர் திரு   சாந்தலிங்கம் அவர்கள் பேசுகிறார்.
வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிறார். இந்த இடத்தின் வரலாற்றைச் சொல்கிறார். 

முதலில் குடவரைக் கோயிலைப் பார்த்து வந்த பின் அவர் பேச்சின் மூலம் மேலும் சில விஷயங்கள் தெரிந்துகொண்டு மீண்டும் போய்ப் பார்த்து வந்தோம் அனைவரும்.
இந்த இடத்தைப் பாதுகாத்துக்கொண்டு இருக்கும்   பெருமாள் என்பவரையும் அவரது உதவியாளரையும்  பாராட்டிப்  பரிசு வழங்கப்பட்டது. (புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு  வேலி ஓரத்தில் இருப்பவர் தியாகராஜன் . இங்கு  30 வருடங்களாய் தொடர்ந்து வருகிறார்  அவருக்கும் புத்தகம் நினைவு பரிசாக வழங்கபட்டது. அவர் பக்கத்தில் இருப்பவர்தான் பெருமாள் அவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

பெருமாளின் உதவியாளர் இந்த இடத்தையும், சுற்றுப்புறத்தையும்   பாதுகாத்து வருபவர்.   

பசுமை நடை சாந்தலிங்கம் அவர்கள் பேசியதை இந்தச் சுட்டியில்  கேட்கலாம்.
அருவிகள், சிங்கம், புலி, கரடி , மயில்கள்  போன்றவைகள்  அங்கு இருந்தன என்று இலக்கியங்கள் கூறுகின்றன, இப்போது இவை எல்லாம்  எங்கே என்றும் கேள்விகள் கேட்டார்.

மலேஷியாவிலிருந்து வந்த எழுத்தாளர் மலர்விழி அருமையாகப் பேசினார். ("கடாரம்'  என்ற நூலை எழுதி இருக்கிறார். ராஜேந்திர சோழனைப்பற்றி என்று சொன்ன நினைவு)

"தமிழ்மொழி தாய்லாந்து, இந்தோனேசியா, கம்போடியாவில் எல்லாம் பரவி இருந்தது . 'ரொம்ப காலமாக 'பாரதம் , பாரதம்'என்று   குறுகிய வட்டத்தில் சிந்தனை இருந்தது, கொஞ்ச காலமாய் தான் உலகளாவிய சிந்தனை (குளோபல்)  வந்து இருக்கிறது'என்கிறார்கள், ஆனால் சோழர்கள் காலத்திலேயே  கம்போடியா, சீனா, இந்தோனேசியா, போன்ற கீழை நாடுகளுடன்  பரந்த அளவில் எல்லாத் துறைகளிலும் தமிழ்நாடு உலகளாவிய தொடர்பு உடையதாக இருந்தது "என்று சில சான்றுகளுடன் தெரிவித்தார். 

அவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது, அதற்கு அமீரகத்திலிருந்து வந்து இருந்த இஸ்லாமிய சகோதரரை  அளிக்கச் சொன்னார்கள்.

உள் அறையில் இருந்த அர்த்தநாரி சிற்பம் .
காளைமாடு பின்புறம் இருட்டுக்குள் இருக்கிறது 
மற்றவர்களின் அலைபேசியின் வெளிச்சத்திலும், என் கணவரது டார்ச் லைட் வெளிச்சத்திலும்  எடுத்த படம்.
                  தலைக்கு மேலே அசோகமரத்தின் கிளைகள் காணப்படுகிறது.

தேவாரம் பாடிய மூவர்
விலங்குகளுக்கு தண்ணீர்த் தொட்டி அமைத்து இருக்கிறார்கள். புதிதாக நிறைய மரங்கள் நடப்பட்டு உள்ளன, பசுமை நடை அமைப்பின் மூலம்
மலை அருகில் விலங்குகள் தண்ணீர் அருந்தத் தொட்டி வைத்து இருக்கிறது. ஒரு அன்பர் நிறைய மாம்பழங்களைத்  தண்ணீர்த் தொட்டியின் மேல் வைத்துச் சென்றார்.
கிணறு வெகு ஆழமாய் இருக்கிறது. இப்போது அதில் நீர் இல்லை. கம்பித் தடுப்பு போட்டுப்  பூட்டப்பட்டு இருக்கிறது .

உணவு இடைவேளையில் வந்து இருந்தவர்கள் விளையாட ஆரம்பித்து விட்டார்கள்.


கல்மேல் அமர்ந்து இங்கு என்ன கூட்டம் என்று பார்க்கிறது.
 முகம் சிவந்து  இருக்கிறது.
நான் இன்னும் வளர்ந்தால்தான் மரத்தைக் கட்டிப்பிடிக்க முடியும் என்று நினைக்குது போல!
     மரத்தடியில் நிறைய குரங்குகள், மரத்தின் மீதும் குரங்குகள்        சண்டையிட்டுக் கொண்டு இருந்தன.


எல்லாம் பார்த்து முடித்தவுடன் 8.30 மணிக்குக் காலைச்சிற்றுண்டி வழங்கப்பட்டது. இட்லி, தக்காளிச் சட்னி, தேங்காய்ச் சட்னி, சாம்பார் என்று. வழக்கம் போல் ஞாயிறு என்பதால் நாங்கள் விரதம், சாப்பிட முடியாது 12 மணிக்கு மேல்தான் மதிய உணவு  என்றதும் வைத்துக் கொள்ளுங்கள் வீட்டுக்குப் போய்ச் சாப்பிடுங்கள் என்று கொடுத்தார்கள்.


குழந்தை  வாங்கி வரும் போது  போட்டோ எடுக்க நினைத்ததும் அந்த குழந்தை வேண்டாம் என்றாள் உன் தட்டை மட்டும் எடுத்துக் கொள்கிறேன் என்றேன் சரியென்றாள்.

மயில் எல்லாம் நிறைய  இருந்தது என்று சாந்தலிங்க ஐயா சொன்னது உண்மை என்பது போல் மயில் அகவும் சத்தம் கேட்டது , போட்டோ எடுக்க 
ஆவலாகப்  போனேன். "மயில் குயிலாச்சு அக்கச்சி"என்பது போல் மயிலைக் காணோம். குயில் நின்றது.

அதுவும் முகம் காட்ட மறுத்து விட்டது.

அடுத்து நாங்கள்  வாகனம் நிறுத்தும் இடம் போனபோது அங்கு ஒரு விழா நடந்தது அது என்ன விழா யார் யாருக்கு நடத்தியது என்பதை அடுத்த பதிவில்.

வாழ்க வளமுடன்.

தென்பரங்குன்றம் - பகுதி 2

$
0
0
அடுத்து நாங்கள்  வாகனம் நிறுத்தும் இடத்திற்குப் போனபோது அங்கு ஒரு விழா நடந்தது அது என்ன விழா யார் யாருக்கு நடத்தியது என்பதை அடுத்த பதிவில். என்று சொல்லி இருந்தேன். போகும் வழியில் பூத்துக் குலுங்கும் மரங்கள், பூங்கா, மலை அழகு  எல்லாம் பார்த்து விட்டு விழாவிற்குப் போவோம்.
தென்பரங்குன்றம் முந்திய பதிவு படிக்க.

மஞ்சள் பூக்களும், சிவப்புப்  பூக்களும்  கண்ணுக்கு விருந்தளிக்கிறது
வரும் வழியில் சிறுவர் பூங்கா இருக்கிறது. ஆனால் பூட்டி இருந்தது, மாலை திறப்பார்களா, தெரியவில்லை . கம்பித் தடுப்பு வழியாக  எடுத்த படங்கள்.
சுத்தமாக இருக்கிறது பூங்கா, ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கும் நாய் .
ஊஞ்சல், சீ-சா பலகை, குப்பை கொட்ட அழகிய முயல் சிலை எல்லாம் தெரிகிறது.

சறுக்கு மரம் யானைவடிவில். ஆனால் உபயோகம் இல்லை போலும். முள் போடப்பட்டு இருக்கிறது.
மலையடிவாரம் , மரங்கள் எல்லாம் அழகு, அடுத்துப் போகும்போது புதிதாக நடப்பட்ட மரங்களும் வளர்ந்து, இந்த இடம் மேலும் அழகு மிளிரும். 
மலை மேல் காசி விஸ்வ நாதர் கோவில் 650 படிகள் ஏறிப் பார்க்க வேண்டும். முன்பு போய் இருக்கிறோம்.

எங்கள் வாகனத்தை எடுக்கப் போன இடத்தில்  ஒருவர் குழந்தைகளுக்குத் தன் கால்களை கவனிக்கும்படி சொல்லிக் கொண்டு இருந்தார்.  இது என்ன விளையாட்டு என்று நினைத்து கண்களைச் சுழலவிட்டுச் சுற்றுப்புறத்தைப்பார்த்தேன். குழந்தைகள் கையில் கம்புகளுடன் இருந்தார்கள். ஓ! சிலம்புப் பயிற்சியா என்று நினைத்துக் கொண்டேன், நாம் தான் எத்தனை சினிமாவில் இந்தச் சண்டையைப் பார்த்து இருப்போம், நம் பழைய கலை இது அல்லவா? விழா ஊர்வலங்களின் முன்  சிலம்பாட்டம் செய்துகொண்டு போவதையும் பார்த்து இருக்கிறோம்.

கம்பு வைத்து பயிற்சி செய்யும் முன் கால் வைத்து கொள்ளும்  முறையை சொல்லித் தருகிறார்.
ஆண், பெண் குழந்தைகள் சிலம்புப் பயிற்சி செய்கிறார்கள்.
சிலம்பு கற்றுக் கொள்ள நல்ல இடம்
ஆட்டம் முடியும் நேரம்
குருவிற்கு நன்றி சொல்கிறார்கள்.

சிலம்பம் ஒரு தற்காப்புக் கலை.   அகத்திய முனிவர் 64 கலைகளில் ஒன்றாக  சிலம்பத்தைச் சொல்கிறார். இந்த விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் சொல்வார்கள் கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மை பாதுகாத்துக் கொள்ளும் கலை.  இந்த விளையாட்டைக் கற்றுக் கொள்ளக் குறைந்தது ஆறுமாதம்  வேண்டுமாம். திருவிழா, கோவில்விழாக்கள், ஊர்வலங்களில்  சிலம்பாட்டம்  இடம்பெறுகிறது.  ஆண், பெண் இருவருமே கற்றுக் கொள்கிறார்கள். இக் கலை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில்  சிறந்து விளங்குகிறது.

"கொட்டுக்கொட்டென்று மேல் பொட்டிப் பகடையும்
கொல்வேன் என்றான் தடிக்கம்பாலே;
சட்டுச் சட்டென்று சிலம்ப வரிசைகள்
தட்டிவிட்டான் அங்கே பாரதன் வல்லை"

- நாட்டுபுறப்பாடலில் வரும் கும்மிப் பாடல்.

வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயரை விரட்ட சிலம்பத்தைப் பயன்படுத்தினார்  என்று இந்த கும்மிப் பாடல் சொல்கிறது.

வாதம், பித்தம், கபம் நீக்கும் என்று பழைய "பதார்த்த குண சிந்தாமணி நூலில் சொல்லப்படுகிறது. அகத்தியர் முதலில் சிலம்பம் கற்ற பின்தான் யோகம், மருத்துவம் போன்ற கலைகளைக் கற்றார் என்றும் சொல்கிறது. 
சிலம்பாட்டம் சிறந்த உடற்பயிற்சியாகும், கம்பு எடுத்துச் சுழற்றும் போது உடம்பில் உள்ள ஒவ்வொரு நாடி , நரம்பும் , தசைகளும் இயக்கப்பட்டுகிறது. (இந்த குறிப்புகள் விக்கி பீடியாவில் படித்துத் தெரிந்து கொண்டேன். விக்கிபீடியாவிற்கு நன்றி.)

இப்போது உள்ள காலக்கட்டத்திற்கு பெண் குழந்தைகளுக்கு இந்த தற்காப்புக் கலை அவசியம் என்று தோன்றுகிறது.

இந்த இடம் அருமையான இடம்.  நல்ல காற்றோட்டம்.  உள்ள இடத்தில் காலை நேரப் பயிற்சி அந்தக் குழந்தைகளுக்கு உடலுக்கும், மனத்திற்கும் புத்துணர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தைத் தரும். கற்றுக்கொள்ளும் குழந்தைகளின் பெற்றோர்கள்,  பயிற்சி செய்வதை மலர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

அப்போது,"மழைத்தூறல் போடுது சார்! கேக் வெட்டிடுவோம் !"என்று ஒரு சிறுவன் குரல் கொடுத்தார்.
சிலம்பு கற்றுக் கொடுக்கும் வாத்தியாருக்குத் தான் பிறந்த நாள்.
இந்த மாஸ்டர் பேரு பாலா. அவருக்குத்தான்  அவர் நண்பர்களும் அவரிடம் கற்கும் மாணவ மாணவிகளும்  இந்த விழாவை நடத்தினர். அதில் பங்கு கொண்டு பாலாவை வாழ்த்தினோம் , நான் அவரிடம் கேட்டுப் படம் எடுத்துக் கொண்டேன்.  எளிமையாக மெழுவர்த்தி அது இது என்று இல்லாமல் வானம் பன்னீர் தூறல் போட, பைக் மேல் வைத்து கேக் வெட்டப்பட்டது, பிறந்த நாள் பாடலுடன். எல்லோருக்கும் கையில் தான் கேக் துண்டங்கள் கொடுக்கப்பட்டது.  எனக்கும் கொடுத்தார்கள், ஞாயிறு விரதம் என்பதால்  வேண்டாம் என்று சொல்லி அவர்களை வருத்தப்பட வைக்காமல் கையில் வாங்கிக் கொண்டு அதை மறுநாள் சாப்பிட்டேன்.  கேக்  வைத்து இருக்கும் படத்தைச் சிறுபையன் எடுத்தார். "நான் எடுக்கிறேன் அக்கா"என்றார் உச்சி குளிர்ந்து விட்டது. இப்போது  'அம்மா!', 'பாட்டி!'என்று சில குழந்தைகள் என்னை அழைக்கும். இந்தச் சிறுவன் 'அக்கா!'என்று சொல்லிப் படம் எடுத்தார்.


மகிழ்ச்சியால் பூரிக்கிறது முகம் ,இல்லே!
விழா  முடிந்தவுடன் அந்தத் திடலில் உள்ள காக்கும் தெய்வம்  கருப்பண்ணசாமியை வணங்கினோம்.   

இருளப்பசாமி, சீலைக்காரி அம்மன், ஐயனார் சாமி


சப்த கன்னியர் இருக்கிறார்கள்.

ஆட்டுக்கல் 

                       பொங்கல் வைத்து வழிபட அடுப்புக் கற்கள்

இந்த சாமிகளைக் குலதெய்வமாய்க் கும்பிடும் பக்தர்கள் குடும்பத்துடன் வந்து வழிபட அருமையான இடம்.  கிராம தெய்வங்களின் இருப்பிடம் அழகிய இடங்கள் தான்.

                                                   வாழ்க வளமுடன்!
                                                        ----------------------


ஆடி மாதம் அம்மனுக்குத் திருவிழா

$
0
0
சங்கரன் கோவில் திருவிழா 17 ஆம் தேதி (17.7.2018) தொடங்கியது.  நாங்கள் அடுத்த நாள் 18ம் தேதி புதன் கிழமை சென்று வந்தோம்.  என் தங்கைகள் அண்ணி எல்லோரும் ஆடித்தபசு சமயம் வருடா வருடம் செல்வார்கள் ஒவ்வொரு வருடமும் அழைப்பார்கள். இந்த முறை வாய்ப்பு கிடைத்தது அன்னையின் அருளால்.
Image may contain: tree, sky and outdoor
ரயில் வசதியாக இருக்கிறது அதில் போகலாம் என்று ரயிலில் பயணம். செங்கோட்டை பாஸஞ்சர் காலை 7.20க்குக் கிளம்பியது மதுரையிலிருந்து.  10 மணிக்குப் போய்ச் சேர்ந்தது சங்கரன்கோயில். ரயிலில் கூட்டம் இல்லை.  வசதியாக இருந்தது. உறவுகளுடன் பேசி மகிழ்ந்து போனதில் வெகு சீக்கிரம் கோவில் வந்துவிட்ட உணர்வு.

ரயில் நிலையத்தில் இருந்த ஒரு அழகான விழுதுகள் தாங்கும் ஆலமரம்





கோவில் கோபுரத்தை எடுக்கமுடியாதபடி விழாப் பந்தல் மறைத்து விட்டது, மேலே இருக்கும் கோபுரப் படம் கோவில் உட்புறம் எடுத்தது. அதனல்  உள் நுழைந்தவுடன் இடது பக்கம் பிள்ளையார், வலது புறம் முருகன் இவர்களையும்  கடைகளையும் தாண்டி உள்ளே போனோம்.  என் கணவரின் சின்னமாமாவுடைய மருமகள் கோவிலில் எங்களைப் பார்த்துவிட்டு எங்களை அழைத்துச் சென்றார். அவர் பிறந்தது - வளர்ந்தது எல்லாம் சங்கரன்கோவில் தான். அதனால் கோவில் வரலாறு, விழாவிபரம் எல்லாம் சொல்லிக் கோண்டே  உடன் வந்தார். 
அம்மன் அலங்காரப் பந்தலில் இருந்தார். தூரத்தில் வரும் போதே அடுக்கு தீபாராதனை பார்த்துக் கொண்டே தான் வந்தோம். அம்மனுக்கு நேரே நடுவில் அவ்வளவு பக்தர்கள் அமர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
அரசமரத்தின் கீழ் கோமதி அம்மனின் தபசுக்காட்சி

சங்கன், பதுமன் என்று இரண்டு நாகமன்னர்கள் இருந்தார்கள். ஹரனே(சிவன்) உயர்ந்தவன் என்று சங்கனும்,ஹரியே உயர்ந்தவன் என்று பதுமனும் கூறிச் சண்டையிட்டனர். இது பற்றி அவர்கள் கோமதி அம்மனிடம்  முறையிட்டனர்.  அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் கோமதி அம்மன் ஹரியும் ஹரனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்த  தவம் செய்ததால்  ஆடிப் பெளர்ணமி உத்திராட நட்சத்திர தினத்தில் சிவபெருமானும், திருமாலும் ஸ்ரீ சங்கர நாராயண தரிசனம் தந்தார்கள்.கடவுளர் இருவரும் சமம், அன்பினாலும், தியாகத்தாலும் தான் இவர்களை அடைய முடியும் எனும் தத்துவத்தை உணர்த்தும் அவதாரம்தான் சங்கரநாராயண தோற்றம்.

நாக அரசர்கள் அம்மனுடன் இத்தலத்தில் தங்கினர். அதனால் ராகு, கேது தோஷங்கள் விலகும், நாக தோஷங்கள் விலகும்.  இந்த மரத்திற்கு பக்கத்தில் நாகர் சிலை இருக்கிறது அதற்கு மக்கள் பால் அபிஷேகம் செய்து வழிபட்டு தோஷம் நீங்கிப் போவதாய் மகிழ்ச்சியுடன் செல்கிறார்கள்.

இத் தலம்  சக்தி பீடங்களில் ஒன்று. தங்கப் பாவாடைக் காட்சி ஓவியம்
அம்மன் சன்னதி போகும் வழியில் இருந்தது. அம்மன் அழகாய் இடையை ச்சாய்த்து  ஒரு கையில் மலர்ச்செண்டு ஏந்தி இருக்கிறார். செவ்வாய்க்கிழமை வெள்ளிப்பாவாடையும், வெள்ளிக்கிழமை தங்கப்பாவாடையும் அணிகிறார்கள்.
தினமும் லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது.

திருவாவடுதுறையின் பத்தாவது குருமூர்த்தமாக எழுந்தருளியிருந்தவர் மேலகரம் வேலப்ப தேசிகராவார்.  வேலப்ப தேசிக மூர்த்திகள் கோமதியம்மையின் திருமுன்பு ஒரு மந்திரச் சக்கரத்தைப் பதித்தருளினார். அதில் அமர்ந்து நம் வேண்டுதல்களை சொல்லி அம்மனைப் பார்த்து வேண்டினால்  நம் எண்ணம் பலிதமாகும், நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை. மன நோய், உடல் நோய் மற்றும் பல வேண்டுதல்கள் நிறைவேறி இருப்பதாய் புராணம் சொல்கிறது. உ.ம்:- நெற்கட்டுஞ்செவலின் குறுநில மன்னராகிய சிவஞானப் பூலித்தேவர், குருமூர்த்தியைக் கண்டு பணிந்து அவர் திருவருளால் தமக்கிருந்த குன்ம நோய் நீங்கப் பெற்று ஞானதேசிகருக்கு விளைநிலம் முதலானவற்றைச் சிவபூஜை, குருபூஜை, மாகேசுர பூஜைகளின் பொருட்டுச் சாசனம் செய்து கொடுத்தார்.

கோவிலில் வைக்கப்பட்டு இருந்த சங்கரநாராயணர் ஓவியம். இத போல் தனிச் சன்னதியில் இவர் அழகாய்க் காட்சி தருகிறார். ஆடை அலங்காரம் இருவருக்கும் மிக அற்புதமாய்ச் செய்து இருந்தார்கள். பாதி முகம் சந்தனம் அது சங்கரர், கறுப்பு முகமாய்  அப்படியே நாமம் மட்டும் போட்ட பாதி முகம் நாராயணர். உற்சவரும் வெளிப்பக்கத்தில் அழகாய் இருக்கிறது.

திருநாவுக்கரசு நாயனார் திருவலிவலம் தேவாரத் திருப்பதிகத்தில் (எட்டாவது பாடல் -ஆறாம்திருமுறை)
"மின்னவன்காண் உருமவன்காண், திருமால் பாகம் வேண்டினன் காண்"
என்று பாடி அருளி உள்ளார். இதில், சிவபெருமானிடத்தில் திருமால்  இடப்பாகத்தை  வேண்டிப் பெற்ற வரலாறு கூறப்படுகிறது.




கோவிலின் உள்ளே சங்கரலிங்கப்பெருமான் சந்நிதியைச் சுற்றி அமைந்துள்ள பிரகாரத்தில் பாம்புப் புற்று அமைந்துள்ளதாக வரலாறு கூறுகிறது. அங்குள்ள சுவாமியின் பெயர் வன்மீக நாதர் என்று அழைக்கப்படுகிறது. கோபுரம் முழுவதும் பாம்புகளின் சிலை வடிவங்கள் உள்ளன.
                       தேசியக்கவி பாரதி பாடிய 'கோமதி மஹிமை'பாடல்.

 சங்கர நயினார் கோவில் ஆவுடையம்மையின் புகழ்  பாடும் பாடல்.
சிவபிரான் தானும் திருமாலும்  ஒன்று என்று  ஒரு வடிவங்காட்டிய சரித்திரத்தை சொல்லும் கோமதி மஹிமை பாடல்.  இந்த பாடல் முற்றுப்பெறவில்லை இந்த பாடலை எழுதி நிறைவு செய்ய  பாரதி  மீண்டும் அவதரிப்பான்(ர்) என்று முடிவில் இருக்கிறது. படம் கைபேசியில் அவசரமாய் எடுத்தது  அம்மன் சன்னதி வாசலில் சுவரில் இருக்கிறது
அம்மன் சன்னதி செல்லும்  பாதை
திருமணங்கள்  நடைபெறுமாம் இந்த இடத்தில். பக்கத்தில் மணமக்கள்  உடை மாற்றும் அறை இருக்கிறது. திருமணங்களுக்கு இப்படித்தான் மணவறை அமைப்பார்கள் .
திருமாலின் தாமரைக் கண்கள்  நாம் எந்தப் பக்கம் போனாலும் நம்மை பார்ப்பது போலவே உள்ளது கம்பித் தடுப்புக்குள் இருக்கிறார் அப்படி இல்லையென்றால் பக்கத்தில் சூடன் வைத்துப் பாழ் செய்து விடுவார்கள் நம் அன்பர்கள்.
புற்றுமண் மருந்து இங்கு அனைத்து நோய்களுக்கும் மருந்து. இரண்டு கல் பாத்திரத்தில் வைத்து இருக்கிறார்கள் ஒன்றில் நீர் விட்டுக் கரைத்து வைத்து இருக்கிறது மக்கள் நெற்றியிலும் நோய் உள்ள இடங்களிலும் பூசிக் கொள்கிறார்கள்.  (என் நிழல் விழுந்து இருக்கிறது. மக்கள் போய் கொண்டே இருந்தார்கள். எங்கேயும் ஒதுங்கி எடுக்க வழியில்லை.)

இந்தக் கோவில் யானை கோமதி பெருங்காட்டூர் திருக்கோட்டி அய்யனார் கோவிலில் இருந்து எடுத்து வரும் புற்று மண், பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும்.

அம்மன் அபிஷேகத் தொட்டிக்கு  எதிரில்  ஒரு அறையில் சேமிக்கப்படுகிறது.
பக்தர்களும் இந்தப் புற்று மண்ணை வெள்ளி, செவ்வாய்க்கிழமையில் நேர்த்திக்கடனாக  ஓலைப்பெட்டியில் சுமந்துவந்து கொட்டுவார்களாம்.
கண்ணாடியில் பார்த்து நெற்றியில் அணிந்து விட்டு அப்படியே கண்ணாடியில் கையைத் தேய்த்துவிட்டுப் போவதால் இப்படி அறிவிப்பு.
கோவில் சுவர்களில் அழகிய சிலைகள்
கொற்றவை

நடராஜா தனிச் சன்னதியில் அழகிய அலங்காரத்தில்
பதஞ்சலி முனிவரும், வியாக்கிரபாதரும்

திருவிழாவில் ஸ்வாமி அம்மன் உலா வரும் வாகனங்கள்
அழகிய பல்லாக்கு
வெள்ளிச் சப்பரம்
காமதேனு
பூத வாகனம்

வியாக்கிரபாதர்  வீணை மீட்டும் வாகனம்
No automatic alt text available.
தங்கம், வெள்ளி, விளைபொருட்கள் காணிக்கையாகப் போடும் இடம்.
தேள், பாம்பு, மனித உருவங்கள் வெள்ளியில் விற்கப்படுகிறது.
No automatic alt text available.
வெண்கலப் பாத்திரங்களும் காணிக்கையாக அளிக்கப்படுகிறது.
கோழி, சேவல், ஆடு, மாடும் காணிக்கை

சேலைகள்  விற்றுக்கொண்டு இருந்தார்கள், மூன்று சேலை 100 ரூபாய் என்று. காணிக்கைப் பொருட்கள் ஏலம்விடப்படுமாம்.
                                               Image may contain: sky, cloud and outdoor
                           சங்கரநயினார் கோவில் கோபுரம்
                                               Image may contain: outdoor
                                                     கோவில் யானை கோமதி.
                                           Image may contain: outdoor

ஆடி வெள்ளிக்கிழமை மாவிளக்கு மிகவும் முக்கியம் அம்மனுக்கு. அதுவும் இங்கு வேண்டிக் கொண்டு மாவிளக்கு பார்ப்பது மிகவும் விசேஷம். முன்பு கோவில் வாசலில் கடைகளில் மாவிளக்கு மாவு கிடைக்கும். வெளியூரிலிருந்து வரும் மக்கள் அங்கே வாங்கி மாவுவிளக்கு பார்த்துவிட்டு செல்வார்கள்.
இப்போது கிடைக்குதா என்று தெரியவில்லை.  பூஜை ஆகிறது என்று வேகமாய் உள்ளே வந்து விட்டோம், பூஜையைப் பார்க்க . வரும்போது வேறு வாசல் வழியாக ஆட்டோவில் உறவினருடன் திருவாவடுதுறை மடத்திற்குப் போய் விட்டோம்.
                                                    
வெளிப்புற கோபுரம் எடுக்க முடியவில்லை என்னால். அதனால் கூகுள்  படம்.
நன்றி கூகுளுக்கு.

வைத்தீஸ்வரன் கோவிலுக்கு செவ்வாய் தோஷம் நீங்க வழிபடுவார்கள்.
அது போல் இங்கும் செவ்வாய் தோஷம் நீங்க வழிபடும் தலமாய் விளங்குகிறது. திருமணத் தடை நீங்க , ராகு, கேது பரிகாரத் தலம், சர்ப்பதோஷம் நீங்க வழிபடும் தலம்.

எங்கள் பக்கம் (திருநெல்வேலி) பாம்பு, தேள், பூரான் கண்ணில் பட்டால் "அம்மா! கோமதி அம்மா! இவைகள் கண்ணில் படாமல் இருக்கவேண்டும்"  என்று வேண்டிக் கொள்வார்கள். தேள்,பூரான் கடித்தால் அம்மனை வேண்டி புற்று மண்ணைக் குழைத்துப் பூசிவிடுவார்கள், கொஞ்சம் அதைச் சாப்பிடுவார்கள். சரியாகி விடும் என்றும் சொல்வார்கள்.

                           

ஆடித் தபசு காலத்தில் அம்மனை  108 சுற்று சுற்றுவார்களாம். அதற்கு கோயில் வாளாகத்தில் ஒரு அட்டை கொடுக்கிறார்கள். தினம் எவ்வளவு சுற்றினோம் என்று குறித்துக் கொள்வார்களாம். மறுநாள் மறுபடியும் மீதியைத் தொடர்ந்து சுற்றுவார்களாம்.பத்து நாட்களில் சுற்றி  நிறைவு செய்வார்கள்.

கோவில்  பிரகாரத்தில் மக்கள்  சுற்றுவதால் அம்மன், சன்னதி, சுவாமி சன்னதி, சங்கரநாராயணர்  சன்னதியில் கூட்டம் இல்லை. 10 டிக்கட்   வாங்கி உள்ளே போனால் நன்றாக யாரும் விரட்டாமல் கண்குளிர தரிசனம் செய்தோம்.
இப்படி எல்லாக் கோவிலும் இருந்தால் எப்படி இருக்கும் என்று மனம் நினைத்தது.

பி.சுசீலா பாடிய  பாடல்  சங்கரன் கோவில் அம்மன் பாடல். கேட்க ஆசைப் பட்டால் கேட்கலாம். மிக நன்றாக இருக்கும்.

                                                                  வாழ்க வளமுடன்.
Viewing all 789 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>